Tuesday 13 September 2011

எமெர்ஜென்சி, எம்.ஜி.ஆர்.மரணம், ராஜீவ்கொலை, இமானுவேல் சேகரன்(அரசியல் கேள்வி பதில்கள் பாகம்-2)






எமர்ஜன்சி நீடித்திருந்தால் நாடு உருப்பட்டு இருக்கும் என்று ஒரு கூற்று உண்டு....அது உண்மையா?

நிச்சயமாக இல்லை. தன்னை எதிர்ப்பவர்களை காரணமில்லாமல் கைதுசெய்ய இந்திராகாந்தி பயன்படுத்திய அடக்குமுறை ஆயுதமே எமெர்ஜென்சி. நாடு முன்னேறுவதற்காக இந்திரா எமெர்ஜென்சியை கொண்டு வந்திருந்தால் பின்னாளில் அதற்காக மன்னிப்பு கேட்டாரே அது ஏன்?.
பெருந்தலைவர் காமராஜரே நாடு போச்சு என்றுதானே சொன்னார். அந்த சமயத்தில் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு சஞ்சய்காந்தி ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமில்லை. இந்தியாவில் பிறப்பு விகிதத்தை குறைக்கிறேன் என்று எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட முதல் ஐந்து மாதங்களிலேயே சுமார் 37 லட்சம் பேர்கள் வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டனர். கருத்தடைக்கு ஆள் பிடிக்குமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
அப்படி அறைகுறையாக அல்லது அவசர அவசரமாக கருத்தடை செய்யப்பட்டதால் பலர் செத்து மடிந்தனர். அதேநேரம், அதிகாரிகள், ஊழியர்கள் என்று அனைவருமே சரியான நேரத்திற்கு வந்து ஒழுங்காக வேலை பார்த்தனர். ஸ்ட்ரைக், பந்த் என்று எதுவுமே எமெர்ஜென்சி காலத்தில் நடைபெறவில்லை. கள்ள மார்கெட் ஒழிந்தது போன்றவை ஆறுதலான விஷயங்கள். 
================


எம்ஜிஆரின் மறைவு இயற்கையானதா?...உண்மையில் நடந்தது என்ன?...விளக்க முடியுமா நண்பா!

1987- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி இரவு, தனது ராமாவரம் தோட்டத்தில் உறங்கிக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். நள்ளிரவு 12:30-க்கு(அதாவது 24-ஆம் தேதி) பாத்ரூம் சென்று வந்தவர் சிறிது நேரத்தில் நெஞ்சு வலிக்கிறது என்றார். அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கப்பட்டது. அதை குடித்தவுடன் மயக்கமடைந்து விட்டார் எம்.ஜி.ஆர். டாக்டர்கள் வந்து சிகிட்சை அளித்தனர். ஆனாலும், சிகிட்சை பலனின்றி அதிகாலை 3 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. இதுதான் நடந்தது. 

**************************




ராஜீவ்காந்தியை உண்மையிலேயே கொன்றது யார்...???
அந்த படுகொலையை ஒரு துன்பியல் சம்பவம் என்று சொல்லியிருந்தாரே விடுதலை புலிகளின் தேசியத்தலைவர் பிரபாகரன்...அதன் பிறகுமா இந்த கேள்வி...

=====================

எம்ஜியாரின் மரணம் எப்படிப்பட்டது...???
இந்தக் கேள்விக்கான பதிலை விக்கியில் இரண்டாவது கேள்விக்கான பதிலில் தெரிந்து கொள்ளவும். 

*****************

கேட்டவர்: சுரேஷ் தனபால்
 
இமானுவேல் சேகரன் குறித்து தகவல்கள் அளிக்க முடியுமா?

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூர் கிராமத்தில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் பிறந்தவர் இம்மானுவேல் சேகரன் அவர்கள். சிறுவயதிலேயே இந்திய ராணுவத்தில் சேர்ந்து  அவில்தாராக பணியாற்றிவர். 1953 ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின் தலைவராக இருந்து இராமநாதபுரத்தில் "ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு" நடத்தினார். 1954 ஆம் ஆண்டில் முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினார்.

காமராஜர் இவரைச் சந்தித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற இமானுவேல் காங்கிரசில் இணைந்து ஹரிஜன லீக் காங்கிரசில் உறுப்பினரானார். அச்சமயம் மதுரை, இராமநாதபுர மாவட்டங்களில் தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பணியில் இம்மானுவேல் இணைந்துக் கொண்டார். காமராஜர் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்த கக்கன் அவர்களோடு இம்மானுவேல் இணைந்து தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார்.

1957 செப்டம்பர் 10-ஆம் தேதி  நடந்த தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியர் பனிக்கரால்  ஒரு அமைதி கூட்டம் நடத்தப்பட்டது.அந்த  அமைதிக்கூட்டத்தில் தேவர்கள் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரும், தலித்துகளின் சார்பில் கலந்து ஆறு பேரில் இமானுவேலும் ஒருவர். இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். சமாதானக் கூட்டத்தில் தேவேந்திரர்கள் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முடிவெடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கையெழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தேவேந்திரர்கள் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.

"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் செப்டம்பர் 11-கொலை செய்யப்பட்டார்.
தனக்குச் சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக அமைதிக்கூட்டத்தை புறக்கணித்த  பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின்  ஆட்களே கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு முத்துராமலிங்கதேவர் கைதும் செய்யப்பட்டார்.பின்னர் இம்மானுவேல் சேகரனை  கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் என்ற ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஆனால், அந்த அப்பாவிகள் ஐந்து பேரையும் போலீஸார் கைகளையும், கண்களையும் கட்டி குளக்கரையில் வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொன்றனர் என்று கீழத்தூவல் மக்கள் குற்றம் சாட்டினர். அதனை தொடர்ந்து  நடந்த கலவரத்தில் 85 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அன்றிலிருந்து இன்றுவரை இம்மானுவேல் கொலை செய்யப்பட்ட செப்டம்பர் 11-ஆம் தேதியை குருபூஜையாக அவர் சார்ந்த சமுதாயத்தினர் கொண்டாடுவது வழக்கம். 


இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எனக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறேன். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


11 comments:

  1. நன்றி அரசியல்வாதி..

    ReplyDelete
  2. இனி பல கேள்விகள் வரும். பதில்களுக்குக் காத்திருப்பேன்!

    ReplyDelete
  3. சூப்பரா பதில் சொல்லி இருக்கேங்க நன்றி....

    ReplyDelete
  4. தங்கள் பதில்களுக்கு நன்றிங்க!

    ReplyDelete
  5. அருமையான பதில்கள்

    ReplyDelete
  6. அருமையான பதில்கள்... சிறந்த தகவல்கள்..

    பகிர்வுக்கு நன்றி.,

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  7. சில விடயங்களை அறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு .. நன்றிங்க

    ReplyDelete
  8. Badhilgal piriuimbadi erunthathu. Keep it up.

    ReplyDelete
  9. unga poiku oru alavae illaya.itha andavanum poruka mattan.Thiru PASUMPON MUTHURAMALINGA DEVAR AYYA 1NUM DEVARKAL SARBA ANTHA AMAITHI MANATIL KALANTHU KOLLA VILLAI.AVAR ANTHA THOGUTHI MAKKAL SARBAGA-THAN KALANTHU KONDAR.ITHARKU ATHARAM IRUKU.

    ReplyDelete
  10. unga poiku oru alavae illaya.itha andavanum poruka mattan.Thiru PASUMPON MUTHURAMALINGA DEVAR AYYA 1NUM DEVARKAL SARBA ANTHA AMAITHI MANATIL KALANTHU KOLLA VILLAI.AVAR ANTHA THOGUTHI MAKKAL SARBAGA-THAN KALANTHU KONDAR.ITHARKU ATHARAM IRUKU.

    ReplyDelete

இது உங்கள் இடம்.

More than a Blog Aggregator