Friday 23 September 2011

கண்ணதாசன் வனவாசத்தில் சொன்னதெல்லாம் உண்மையா?




கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகம் குறித்து உங்கள் கருத்து என்ன? கலைஞர் இது வரை படிக்காத புத்தகம் என்று கூறியதாக ஒரு தகவலும் உலா வருகிறது, அது உண்மையா?
 கலைஞர் படித்திருப்பாரா இல்லையா என்று எனக்கு தெரியாது.

1943லிருந்து 1961 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை கோர்த்து எழுதப்பட்ட என் சுயசரிதைதான் இந்த வனவாசம் என்று கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.  பெயர்தான் வனவாசமே தவிர...உள்ளிருக்கும் எழுத்தெல்லாம்  யார் மீதாவது சேற்றை வாறி இறைப்பதாகவே இருக்கிறது. 

தனக்கு பிடிக்காத தலைவர்கள் மீது பாலியல் குற்றசாட்டுக்களை அடுக்கும் கண்ணதாசன் அறிஞர் அண்ணாவைக்கூட விட்டுவைக்கவில்லை. கலைஞரையும், அண்ணாவையும் திட்டுவதற்காகவே கண்ணதாசன் வனவாசத்தை எழுதியுள்ளார். அதை விரக்தியின் வெளிப்படு என்றும், வயிற்றெரிச்சலின் எழுத்து வடிவம் என்றும் சொல்கிறார்கள் அதை படித்தவர்கள். 


அப்படி கண்ணதாசன் கலைஞர் மீது சேற்றை வீசுவதற்கு காரணம் இருக்கிறது.
தி.மு.க.,வில் எப்போதும் ஈ.வி.கே.சம்பத்திற்கும், கலைஞருக்கும் ஆகாது. அதே நேரம் கண்ணதாசன் சம்பத்தின் தீவிர ஆதரவாளர். சம்பத் தான் என் தலைவர் என்று பகிரங்கமாக முழங்கியவர். தி.மு.க.,வை விட்டு சம்பத் விலகி தமிழ் தேசிய கட்சியை ஆரம்பிக்க கண்ணதாசனும் ஒரு காரணம். அப்படிப்பட்டவர் எப்படி கலைஞரை பற்றி நல்லவிதமாக எழுதுவார்?. இவ்வளவு ஏன் அதே வனவாசத்தில் அண்ணாவை விட சம்பத்திற்கே செல்வாக்கு அதிகம் இருந்ததாகவும், அதனால், சம்பத்தை பார்த்து அண்ணாத்துரையே நடுங்கிக்கொண்டிருந்தார் எனவும் எழுதியுள்ளார்.

மதியழகனைப் பொதுச்செயலாளராக்குவது என்று சம்பத் எடுத்துக்கொண்ட முடிவிற்கு, அங்கே பெருத்த ஆதரவிருந்தது. கருணாநிதியும் அவரது ஆதரவாளர்களும் கலங்கிப்போய் இருந்தார்கள். எல்லோரும் சம்பத்தையே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அண்ணாத்துரை சம்பத்தை தனியே அழைத்துக்கொண்டு போனார். உண்மையிலேயே கண்ணீர்விட்டு அழுதார். “இந்தத் தடவை மட்டும் நான் பொதுசெயலாளராக இருந்துவிடுக்கிறேன். நமக்குள்ளே தகராறு இருப்பதாக யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றார்.

தன்னாலே ஏற்றி வைக்கப்பட்ட ஒரு மனிதர், தன் கையைப் பிடித்துக்கொண்டு அழுகிறார் என்ற உடனேயே சம்பத் செய்த முதற் பெருந்தவறு இதுதான். அவரைச் சுற்றி இருந்த பலபேரும் உறுதியாக நின்றபோது – அவரது இளகிய நெஞ்சம் அண்ணாத்துரையின் கண்ணீருக்குப் பணிந்துவிட்டது. பிறகு சம்பத்தே தன் ஆதரவாளர்களிடம் அண்ணாத்துரைக்கு விட்டுக் கொடுக்குமாறு கூறினார். அண்ணாத்துரை பொதுச்செயலாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றெல்லாம் சரடு விட்டிருக்கார் கண்ணதாசன். 

மேலும்,அண்ணா பொதுச்செயலாளரான பிறகும் கட்சியில் சம்பத்தின் கையே ஓங்கி இருந்தது. அதைத் தகர்க்க அண்ணாத்துரை ரகசியமாகத் திட்டமிட்டார் என்றும் வேலூரில் தி.மு.க.,பொதுக்குழுவிற்காக தீர்மானம் தயாரிக்கும் பணியிலிருந்த சம்பத்தை தாக்க அண்ணாவின் ஆசியுடன் கலைஞர் ஆள் ஏற்பாடு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அப்படி அண்ணாவையும் தாக்கும் காரணம், சம்பத்தை விட கலைஞருக்கு அண்ணா முக்கியத்துவம் கொடுத்ததுதான்.  

கவிஞர்களுக்கு கற்பனையும், பொய்யும் தான் மூலதனம். அதனால்தான் கவிதைக்கு பொய்யழகு என்கிறார்கள். ஆனால், கண்ணதாசனின் கற்பனை வரியும் , பொய்யும் கவிதையில் மட்டுமல்லாது வனவாசம் என்ற அவரது சுயசரிதையிலும் இடம் பிடித்திருக்கிறது.

 ================

இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எனக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறேன். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள். 
உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


Monday 19 September 2011

ஒரு விளக்கமும், ஒரு பதிலும்(அரசியல் கேள்வி பதில்கள் பாகம்-5)

என்ற பதிவில் ராவணன் என்ற நண்பரிடமிருந்து வந்த பின்னூட்டம் இதோ.....

சும்மா பிகிள் விடவேண்டாம், கருணாநிதி என்ற நபர் எப்போதும் எதற்காகவும் உண்மையாகப் போராடியது கிடையாது. கண்ணதாசனின் வனவாசம் படித்தால் இந்தத் தண்டவாள மேட்டர் எல்லாம் வண்டவாளம் ஏறும்.

ஏர் கூலர் வசதியுடன் இரண்டுமணி நேரம் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதி ஒரு தியாகியா?

என்ன கொடுமை இது?

கருணாநிதி ஆட்சியில் இருந்தபோதும் அது டால்மியாபுரமாகவே இருந்தது.அப்போது ஒரு பயலும் தண்டவாளத்தில் இறங்கவில்லை.

அண்ணா சொன்னார் என்பதால் ஏற்கவேண்டுமா? அண்ணா பொடிவைத்துப் பேசுவதில் கில்லாடி.

அதற்கான என் பதில் கீழே....


 /////நான் பிகிளெல்லாம் விடவில்லை நண்பரே...கல்லக்குடி போராட்டம் பற்றி நான் என் சொந்தக்கருத்தை பதியவில்லை. அதே நேரம், முரசொலியில் இருந்தோ, நெஞ்சுக்கு நீதியில் இருந்தோ இதை எடுக்கவில்லை. வரலாற்று பக்கங்களில் எது பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதைத்தான் எடுத்து சொல்லியுள்ளேன். உங்களுக்கு கலைஞர் மீது காழ்ப்புணர்ச்சி இருக்கலாம். அதற்காக வரலாற்றை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அதே வரலாறுதான் கண்னதாசனையும் இப்படி சொல்கிறது.
கலைஞர் கைது செய்யப்பட்ட பின்...மதியம் 1:30- மணியளவில் கவிஞர் கண்ணதாசன் தலைமையில் 41-பேர் ரயில் முன் படுத்து மறியல் செய்தனர். கூட்டத்தை கலைக்க போலிசார் தடியடி நடத்தினர். அப்படியும் தொண்டர்கள் மீண்டும் மீண்டும் வந்து தண்டவாளத்தில் படுத்தனர்.

கண்ணதாசனையும், மற்றவர்களையும் போலீசார் பலவந்தமாக தண்டவாளத்திலிருந்து வெளியே இழுத்துப்போட்டு அடித்தனர். அவரை கைது செய்து ரத்தம் சொட்டசொட்ட அவரை லாரியில் ஏற்றினர். ////



ஏர் கூலர் வசதியுடன் இரண்டுமணி நேரம் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதி ஒரு தியாகியா?

என்ன கொடுமை இது?

////இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த கலைஞரை யார் தியாகி என்றது? அந்த உண்ணாவிரதம் பெரும் கேலுக்கும், நகைப்புக்கும் உண்டானதை நான் அறிவேன். அதே நேரம் 1970-க்கு முன்பு  கலைஞரிடம் ஒரு போர்க்குணம் இருந்தது உணமை. அந்த போர்க்குணம் இன்று குடும்பம் என்ற சூழலில் சிக்கி நீர்த்துப்போய்விட்டதும் உண்மை ///


கருணாநிதி ஆட்சியில் இருந்தபோதும் அது டால்மியாபுரமாகவே இருந்தது.அப்போது ஒரு பயலும் தண்டவாளத்தில் இறங்கவில்லை.


////டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மாற்றுவதற்காக 1953-இல் தண்டவாளத்தில் தலை வைத்து கருணாநிதி போராட்டம் நடத்தினார் அல்லவா? அதற்கு 16 ஆண்டுகளுக்குப்பிறகு பலன் கிடைத்தது. 1969-இல் டால்மியாபுர ரெயில் நிலையத்தின் பெயரை "கல்லக்குடி-பழங்காநத்தம்" என்று மாற்றுவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.

கல்லக்குடிப் போராட்டம் வெற்றி பெற்றதையொட்டி தமிழ்நாடெங்கும் விழாக்கள் நடைபெற்றன. கல்லக்குடியில் பெரிய விழா ஒன்றுக்கு அன்பில் தர்மலிங்கம் ஏற்பாடு செய்தார்.

இதில் கலந்து கொண்ட முதல்_அமைச்சர் கருணாநிதி, 1953-இல் போராட்டம் நடைபெற்ற இடங்களை பார்வையிட்டு, பழைய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தார். "கல்லக்குடி-பழங்காநத்தம்" என்ற பெயர்ப்பலகையைத் திறந்து வைத்தார் என்றும் வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. ///

அண்ணா சொன்னார் என்பதால் ஏற்கவேண்டுமா? அண்ணா பொடிவைத்துப் பேசுவதில் கில்லாடி.

///அண்ணா பொடிப்போட்டு பேசுவார் என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.///

 கண்ணதாசனின் வனவாசம் பற்றி அடுத்த கேள்வி- பதிலை படிக்கவும்.

==================



கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகம் குறித்து உங்கள் கருத்து என்ன? கலைஞர் இது வரை படிக்காத புத்தகம் என்று கூறியதாக ஒரு தகவலும் உலா வருகிறது, அது உண்மையா?
 கலைஞர் படித்திருப்பாரா இல்லையா என்று எனக்கு தெரியாது.

1943லிருந்து 1961 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை கோர்த்து எழுதப்பட்ட என் சுயசரிதைதான் இந்த வனவாசம் என்று கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.  பெயர்தான் வனவாசமே தவிர...உள்ளிருக்கும் எழுத்தெல்லாம்  யார் மீதாவது சேற்றை வாறி இறைப்பதாகவே இருக்கிறது. 

தனக்கு பிடிக்காத தலைவர்கள் மீது பாலியல் குற்றசாட்டுக்களை அடுக்கும் கண்ணதாசன் அறிஞர் அண்ணாவைக்கூட விட்டுவைக்கவில்லை. வனவாசத்தை விரக்தியின் வெளிப்படு என்றும், வயிற்றெரிச்சலின் எழுத்து வடிவம் என்றும் சொல்கிறார்கள் அதை படித்தவர்கள். 


அப்படி கண்ணதாசன் கலைஞர் மீது சேற்றை வீசுவதற்கு காரணம் இருக்கிறது.
தி.மு.க.,வில் எப்போதும் ஈ.வி.கே.சம்பத்திற்கும், கலைஞருக்கும் ஆகாது. அதே நேரம் கண்ணதாசன் சம்பத்தின் தீவிர ஆதரவாளர். சம்பத் தான் என் தலைவர் என்று பகிரங்கமாக முழங்கியவர். தி.மு.க.,வை விட்டு சம்பத் விலகி தமிழ் தேசிய கட்சியை ஆரம்பிக்க கண்ணதாசனும் ஒரு காரணம். அப்படிப்பட்டவர் எப்படி கலைஞரை பற்றி நல்லவிதமாக எழுதுவார்?. இவ்வளவு ஏன் அதே வனவாசத்தில் அண்ணாவை விட சம்பத்திற்கே செல்வாக்கு அதிகம் இருந்ததாகவும், அதனால், சம்பத்தை பார்த்து அண்ணாத்துரையே நடுங்கிக்கொண்டிருந்தார் எனவும் எழுதியுள்ளார்.

மதியழகனைப் பொதுச்செயலாளராக்குவது என்று சம்பத் எடுத்துக்கொண்ட முடிவிற்கு, அங்கே பெருத்த ஆதரவிருந்தது. கருணாநிதியும் அவரது ஆதரவாளர்களும் கலங்கிப்போய் இருந்தார்கள். எல்லோரும் சம்பத்தையே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அண்ணாத்துரை சம்பத்தை தனியே அழைத்துக்கொண்டு போனார். உண்மையிலேயே கண்ணீர்விட்டு அழுதார். “இந்தத் தடவை மட்டும் நான் பொதுசெயலாளராக இருந்துவிடுக்கிறேன். நமக்குள்ளே தகராறு இருப்பதாக யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றார்.

தன்னாலே ஏற்றி வைக்கப்பட்ட ஒரு மனிதர், தன் கையைப் பிடித்துக்கொண்டு அழுகிறார் என்ற உடனேயே சம்பத் செய்த முதற் பெருந்தவறு இதுதான். அவரைச் சுற்றி இருந்த பலபேரும் உறுதியாக நின்றபோது – அவரது இளகிய நெஞ்சம் அண்ணாத்துரையின் கண்ணீருக்குப் பணிந்துவிட்டது. பிறகு சம்பத்தே தன் ஆதரவாளர்களிடம் அண்ணாத்துரைக்கு விட்டுக் கொடுக்குமாறு கூறினார். அண்ணாத்துரை பொதுச்செயலாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றெல்லாம் சரடு விட்டிருக்கார் கண்ணதாசன். 

மேலும்,அண்ணா பொதுச்செயலாளரான பிறகும் கட்சியில் சம்பத்தின் கையே ஓங்கி இருந்தது. அதைத் தகர்க்க அண்ணாத்துரை ரகசியமாகத் திட்டமிட்டார் என்றும் வேலூரில் தி.மு.க.,பொதுக்குழுவிற்காக தீர்மானம் தயாரிக்கும் பணியிலிருந்த சம்பத்தை தாக்க அண்ணாவின் ஆசியுடன் கலைஞர் ஆள் ஏற்பாடு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அப்படி அண்ணாவையும் தாக்கும் காரணம், சம்பத்தை விட கலைஞருக்கு அண்ணா முக்கியத்துவம் கொடுத்ததுதான்.  

கவிஞர்களுக்கு கற்பனையும், பொய்யும் தான் மூலதனம். அதனால்தான் கவிதைக்கு பொய்யழகு என்கிறார்கள். ஆனால், கண்ணதாசனின் கற்பனை வரியும் , பொய்யும் கவிதையில் மட்டுமல்லாது வனவாசம் என்ற அவரது சுயசரிதையிலும் இடம் பிடித்திருக்கிறது.

 ================

இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எனக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறேன். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள். 
உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


Sunday 18 September 2011

கலைஞர் தண்டவாளத்தில் தலைவைத்து போராடியது எதற்காக? அது நாடகமா? (அரசியல் கேள்வி-பதில்கள் பாகம்-4)

கேள்வி கேட்டவர்: நாஞ்சில் மனோ

1) கனிமொழி இனி ஜீரோ தானே?

அது கனிமொழியின் சகோதரர்கள் கையில் உள்ளது. 

 
================

2) காங்கிரஸ் செய்யும் அடாவடித்தனத்தால் அடுத்து காங்கிரஸ் தோற்கடிக்கப்படலாம். உன்மையா?

இப்போதே காங்கிரஸ் செத்துப்போய்(தோற்கடிக்க பட்டு) விட்டது. இனி, போஸ்ட்மார்டம் செய்து புதைக்க வேண்டியதுதான் பாக்கி.
 
================

3) அடுத்த முதல்வர் விஜயகாந்தாக இருக்கக்கூடும்னு பரவலாக ஒரு பேச்சு அடிபடுகிறதே?

ஏன் ஆறரை கோடி மக்களை ஆள்வதற்கு கோடம்பாக்கத்திலிருந்தே ஆட்களை கொண்டு வருகிறீர்கள்?.சரி, கேட்டுவிட்டீர்கள். அதற்கான வாய்ப்பு இப்போது இருப்பதாக தெரியவில்லை. ஒரு வேளை அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறினால் முதலமைச்சர் வேட்பாளராக இருக்கலாமே தவிர, முதலமைச்சராக இன்னும் சில காலங்கள் அவர் காத்திருக்க வேண்டும்.
 
================

4) கலைஞருக்கு பின் தி.மு.க. உடையும் அபாயம் பற்றி?

நான்காக உடையும் சாத்தியம் குறைவு.இரண்டாக வேண்டுமானால் உடையலாம். கணிசமான தொண்டர்களும், தலைவர்களும் ஸ்டாலின் பின்னால் போகலாம். ஒரு சிலர் அழகிரி பின்னாலும் அணி வகுக்கலாம். ஆனால், கேடி சகோதரர்கள் யார் பின்னால் நிற்பார்கள் என்பதை அப்போதைய சூழ்நிலையை பொறுத்தே அமையும்.
 
=================

5) தமிழருவி மணியனின் நிலைப்பாடு சரிதானே?
நிலைப்பாடு என்றால் எதை சொல்கிறீர்கள்? ஜெயலலிதாவை ஆதரிப்பதிலா?
விடுதலை புலிகள் விஷயத்திலும்,3 பேருக்கு தூக்கு தண்டனை விஷயத்திலும் ஜெயலலிதா இப்போது எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ஆதரிக்கும் மணியனின் நிலைப்பாடு சரிதான். அதற்காக, ஓவராக ஜெயா ஆதரவு நிலை எடுக்கக்கூடாது. இப்போது சொன்னதையே பின்னாளில் மாற்றி சொல்லி முகத்தில் கரி பூசுவதில் ஜெயா கெட்டிக்காரர்.
 

====================

கேள்வி கேட்டவர்:சுரேஷ் தனபால்

கூடங்குளம் அனுமின் நிலையம் அமையக்கூடாது என்று என்று போராட்டம் நடத்தும் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அண்ணாச்சி....மக்களுக்கு கருத்து சொல்லுமளவிற்கு நம்ம ஒர்த்தான ஆள் கிடையாது. அதே நேரம், கூடங்குளம் இன்னொரு போபாலாக மாறிவிடக்கூடாது என்பதே என் பிரார்த்தனை. உலக நாடுகள் எல்லாம் கை விட்டு வரும் ஒரு விஷயத்தை இந்தியா செய்ய துணிந்தது நாட்டிற்கும் நல்லதல்ல....நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல...பெருவாரியான மக்களின் விருப்பத்திற்கு எதிராக அங்கே அது தேவையில்லை என்பதே என் கருத்து
 
====================



கேள்வி கேட்டவர்: ஏகலைவன்

கலைஞர் தண்டவாளத்தில் தலைவைத்து போராடியது எதற்காக? அது நாடகமா?

நிச்சயமாக அது நாடகம்ல்ல....சரித்திரம். 1953-ஜூலை மாதம் 13-ஆம் தேதி  தி.மு.க.,வின் செயற்குழு சென்னையில் கூடியது. அதில் மும்முனை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த மும்முனை போராட்டம் என்னவென்றால்.....
1) முதல்வர் ராஜாஜி கொண்டுவந்துள்ள அரை நேரப்படிப்பு என்பது குலக்கல்வி திட்டமாகும். அதை எதிர்த்து ராஜாஜியின் வீட்டு முன்பு ஈ.வி.கே.சம்பத் தலைமையில் மறியல் செய்யவேண்டும்.

2) திருச்சி அருகேயிருக்கும் கல்லக்குடியில் டால்மியா சிமெண்ட் ஆலை இருப்பதால்..அந்த ஊர் ரயில் நிலையத்திற்கு டால்மியாபுரம் என்று பெயரை சூட்டியுள்ளனர். இதை மாற்றி மீண்டும் கல்லக்குடி என்ற பெயரையே வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான போராட்டத்தை கலைஞர் தலைமையில் நடத்த வேண்டும்.

3) தி.மு.க., வின் போராட்டங்களை பிரதமர் நேரு நான்சென்ஸ் என்று கூறி கொச்சை படுத்தியதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போரட்டங்களை நடத்த்வேண்டும்
என்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதை தொடர்ந்து ஜூலை 15-ஆம் தேதி அங்கு சென்ற கலைஞர் டால்மியாபுரம் என்ற பெயர்பலகையின் மீது கல்லக்குடி என்ற சுவரொட்டியை ஒட்டினார். மறுநொடி கைது செய்யப்படவேண்டும். ஆனால் காவலர்கள் அமைதியாக இருந்தனர். தங்களுடைய போராட்ட முறையை காவலர்கள் அலட்சியப்படுத்துவதாக நினைத்தார் கலைஞர். சட்டென்று போராட்ட வியூகத்தில் மாற்றம் ஒன்றை அமல்படுத்தினார்.
கல்லக்குடி என்ற பெயர் மாற்றத்தை உடனடியாக அங்கீகரிக்கவேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்று சொல்லி ரயில் தண்டவாளத்துக்குக் குறுக்கே படுத்தார் கருணாநிதி. அவரைத் தொடர்ந்து அவருடைய பிரிவில் இருந்த மற்ற தொண்டர்களும் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தனர். எழுந்திருக்கச் சொல்லி மிரட்டினர் காவலர்கள் ஆனால்,கலைஞர் அசைந்துகொடுக்கவில்லை.. ரயில் நிலையத்தின் பெயரை கல்லக்குடி என்று மாற்றும் வரை ரயிலை போக விடமாட்டோம் என்று அவர்கள் கூறினர். கலக்டர், மாவட்ட போலீஸ் அதிகார், மாவட்ட நீதிபதி ஆகியோர் வந்து ரயிலை போக விடுங்கள். உங்கள் கோரிக்கைகளை ரயில்வே மேலிடத்திற்கு அனுப்புங்கள் என்றர்கள். ஆனால், கலைஞர் மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து தண்டவாளத்தில் படுத்திருந்தாலும் பரவாயில்லை. ரயிலை விடுங்கள் என்றனர் அதிகார்கள். ரயில் கிளம்பினால் கலைஞர் குழுவினர் பயந்து போய் எழுந்து விடுவார்கள் என்று அதிகார்கள் நினைத்தனர். ஆனால், நடந்ததோ வேறு, ரயில் நெருங்க நெருங்க கலைஞரும், மற்றவர்களும் அசையவில்லை.

கலைஞர் அருகே வந்ததும், ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலுக்கும், கலைஞரின் தலைக்கும் சில அடி தூரம்தான் இடைவெளி. கலைஞரும், மற்றவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தை அண்ணா முதல்வராக பதவியேற்றப்பின் இப்படி வர்ணிக்கிறார்
தண்டவாளத்தில் தலைவைத்து படு என்றாலும், அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்றாலும் இரண்டையும் ஒன்றாக பார்ப்பவன் என் தம்பி கருணாநிதி.
நாடகமாக இருந்தால் அண்ணா இப்படி சொல்லியிருப்பாரா?

==============================================
  

இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


Wednesday 14 September 2011

காந்தி சுடப்பட்டது ஏன்?- வைரவேல் என்னாச்சு?(அரசியல் கேள்வி பதில்கள்-பாகம்-3)

கேள்வி கேட்டவர் : ஏகலைவன்  

1. இந்துத்வாக்காரரான கோட்சே, காந்தியைச் சுட்டது ஏன்?


1948 ஜனவரி 30ந்தேதி வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாள். அன்று மாலை 4.30 மணிக்கு கோட்சே, ஆப்தே, கார்கரே ஆகிய மூவரும் ஒரு சாரட்டு வண்டியில் ஏறி பிர்லா மாளிகைக்குச் சென்றார்கள். 4.45 மணிக்கு பிர்லா மாளிகையை அடைந்தார்கள். பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு காந்திஜி வரும் வழியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டார்கள்.


காந்தி பிரார்த்தனை மண்டபத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும்போது அவரை சுட்டுவிடவேண்டும் என்பதே கோட்சேயின் திட்டம். இப்போது அவன் திட்டத்தை மாற்றிக்கொண்டான். காந்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு செல்லும்போது வழியிலேயே சுட்டுவிடுவது நல்லது என்று இப்போது அவனுக்குத் தோன்றியது.



"காந்தி எப்போது வருவார்?" என்று மூவரும் படபடப்புடனும், பதைபதைப்புடனும் காத்திருந்தார்கள். வழக்கமாக சரியாக ஐந்து மணிக்கு பிரார்த்தனைக் கூட்டம் ஆரம்பமாகிவிடும். அன்றைய தினம் காந்திஜியை சந்தித்துப்பேச உள் விவகார மந்திரி சர்தார் பட்டேல் வந்திருந்தார்.
பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்படுவதும், அதுபற்றி அவர்கள் காந்தியிடம் முறையிடுவதும், இருவரையும் காந்தி அழைத்து சமாதானம் செய்வதும் வழக்கமாக இருந்தது. அன்றும் நேருவுடன் ஏற்பட்டுள்ள தகராறு பற்றி காந்தியிடம் பட்டேல் முறையிட்டார். "இருவரும் இவ்வாறு அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது நல்லதல்ல" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரம் ஆகிவிட்டதை ஆபா காந்தி நினைவூட்டினார்.



"நீங்கள் நாளை வாருங்கள். இதுபற்றி மீண்டும் பேசுவோம்" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி இருவரும் காந்தியின் இருபுறமும் வர, அவர்களுடைய தோள்களில் கை வைத்தபடி காந்தி நடந்தார். ஆபாவுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டு சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். பத்து நிமிடம் தாமதமாகிவிட்டதால் காந்திஜி சற்று வேகமாக நடந்தார். கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று வணங்கி வழிவிட்டனர். பதிலுக்கு காந்தியும் கை கூப்பி வணங்கியபடி நடந்தார். காந்தி வழக்கமாக செல்லும் பாதை வழியே செல்லாமல் குறுக்குப்பாதையில் சென்றார். கோட்சே நின்ற பாதை வழியாகத்தான் அவர் செல்லவேண்டும். "நம் எண்ணம் எளிதாக நிறைவேறப்போகிறது" என்று நினைத்தான் கோட்சே.
யாரும் அறியாதவாறு இடுப்பிலிருந்த சிறிய துப்பாக்கியை எடுத்தான். 


இரு கைகளுக்கு இடையே அதை மறைத்துக்கொண்டான். சுடுவதற்குத் தயாராக விசையை இழுத்து வைத்தான். காந்தி நெருங்கியபோது கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேறினான். காந்தியின் பாதங்களைத்தொட்டு வணங்கும் நோக்கத்துடன் அவன் வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலைத் தொட்டு வணங்குவதை காந்தி விரும்புவதில்லை.
எனவே "வேண்டாம்! பாபு விரும்பமாட்டார்" என்று மனு காந்தி தடுத்தார். மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளினான் கோட்சே. மனு காந்தியின் கையில் இருந்த காந்தியடிகளின் நோட்டுப்புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே சிதறி விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக மனு காந்தி கிழே குனிந்தார். கண் மூடி கண் திறப்பதற்குள் காந்திக்கு எதிரே நின்று அவர் மார்பை நோக்கி மூன்று முறை சுட்டான் கோட்சே. குண்டுகள் குறி தவறாமல் காந்திஜியின் நெஞ்சில் பாய்ந்தன. இரண்டு குண்டுகள், நெஞ்சை ஊடுருவி முதுகு வழியாக வெளியே சென்று விட்டன. ஒரு குண்டு இருதயத்தில் தங்கிவிட்டது. முதல் குண்டு பாய்ந்ததும் காந்திஜியின் கால்கள் தடுமாறின.
இரண்டாவது குண்டு பாய்ந்ததும் ரத்தம் பீறிட்டு அவருடைய உடையை நனைத்தது. 


"ஹே...ராம்" என்று அவர் இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும் தரையில் ஈரமண்ணிலும், புல் தரையிலும் சாய்ந்தார். அப்போது மணி 5.17. இவ்வளவும் அரை நிமிடத்திற்குள் நடந்து முடிந்துவிட்டன. என்ன நடக்கிறது என்பதை உணரக்கூட சக்தியற்றவர்களாய் கூடியிருந்தவர்கள் அப்படியே திகைத்து நின்றார்கள்.


சுட்டவுடன் கோட்சே தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. புகையும் துப்பாக்கியுடன் அப்படியே சிலை மாதிரி நின்றான். காந்தி சுடப்பட்டார் என்பதை உணர்ந்ததும் சுற்றிலும் நின்றவர்கள் பாய்ந்து சென்று துப்பாக்கியுடன் நின்ற கோட்சேயைப் பிடித்துக் கொண்டனர். சிலர்"துரோகி! கொலைகாரா!" என்று ஆத்திரமாக கூக்குரலிட்டபடி அவனைத் தாக்கத் தொடங்கினார்கள். பலமாக தாக்கப்பட்ட கோட்சேக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இன்னும் சிறிது நேரம் ஆகியிருந்தால் அவன் அடித்துக் கொல்லப்பட்டிருப்பான்.



போலீசார் விரைந்து வந்து அவனை மீட்டு அங்கிருந்து இழுத்துச்சென்றனர். காந்தியைக் கோட்சே சுடுவதையும் குண்டு பாய்ந்து காந்தி கீழே விழுவதையும் சற்று தூரத்தில் இருந்து ஆப்தேயும், கார்கரேயும் பார்த்தார்கள். இனி அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து பிர்லா மாளிகையில் இருந்து நழுவி வெளியே வந்தார்கள். ஒரு சாரட்டு வண்டியைப் பிடித்து அங்கிருந்து புறப்பட்டார்கள். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்திருந்த பெண் டாக்டர் ஒருவர் காந்தி கிடந்த இடத்துக்கு ஓடோடி வந்தார்.
அவர் தலையை மடியில் வைத்துக்கொண்டு நாடித்துடிப்பை பரிசோதித்தார். காந்தியின் உடலில் உயிர் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் வாய் ஏதோ முணுமுணுத்தது. உடனே ஒரு தேக்கரண்டியில் தேனும், வெந்நீரும் அவருக்குக் கொடுத்தார்கள். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது. 


தேனும், வெந்நீரும் வாய்க்குள் செல்லாமல் வெளியே வடிந்துவிட்டது.
டாக்டர் பார்க்கவா வந்து பரிசோதித்துவிட்டு, "காந்தி நம்மைப் பிரிந்துவிட்டார். உயிர் போய்விட்டது" என்று துயரத்துடன் அறிவித்தார். கூடியிருந்தவர்கள் கூக்குரலிட்டு அழுதனர். காந்தி மரணச்செய்தியை சரியாக மாலை 6 மணிக்கு அகில இந்திய ரேடியோ அதிகாரபூர்வமாக அறிவித்தது.


கைது செய்யப்பட்ட கோட்சே டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் காந்தியை எதற்காக கொன்றேன் என்று   வாக்குமூலம் அளித்தான். வாக்கு மூலத்தை அப்படியே தருகிறேன் படியுங்கள்.

காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை.
ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்.

தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.

காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.

பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.

சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.

முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.

15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான். "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.

பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.




சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.

பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. `கொலைக்கு நானே பொறுப்பு' என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.

1948 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினான்


+++++++++++++++++



2. திருச்செந்தூர் முருகன் கோவில் தங்க வேல் காணாமல் போனது உண்மையா? அதைத் திருடியது யார்? அந்த வழக்கு என்ன ஆனது?


“திருச்செந்தூர் கோயில் விடுதியில் கோவில் உதவி ஆணையர்  சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்”, என்ற செய்தி, கொலை என்றெல்லாம் தமிழிதழ்களில் வெளிவந்தன. ஆளும் அதிமுக மற்றும் எதிர் கட்சி திமுக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டனர். உண்டியல் பணத்தை சுப்பிரமணியப்பிள்ளையே திருடி மாட்டிக் கொண்டதாகவும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஆர்.எம்.வீ முதல் அ.தி.முகவினர் எல்லாரும் பிரசாரம் செய்தார்கள்.

 கருணாநிதியும் தி.முகவும் இதை மறுத்தார்கள். உண்டியலில் இருந்த வைர வேலைத் திருடிக் கொண்டது ஆர்.எம்.வீரப்பன்தான் என்றும் அதைத் தட்டிக் கேட்ட நேர்மையான அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை கொலை செய்யப்பட்டதாகவும் தி.மு.க குற்றம் சாட்டியது. பதிலுக்கு அதிமுக, திமுகவைக் குற்றஞ்சாட்டியது.

திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் சுப்பிரமணியப் பிள்ளை கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு, அதற்கு சி. ஜே. ஆர். பால், என்ற ஓய்வு பெற்ற நிதிபதி உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
விசாரனை முடித்து முதல்வர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கையை கொடுத்த பால், அடுத்த நாளே அமெரிக்கா போய் செட்டில் ஆகிவிட்டார்.
நீதிபதி சி.ஜெ.ஆர். பால் கொடுத்த அறிக்கை சாதகமாக இல்லை என்பதால் அரசு அதனை வெளியிடாது இருந்த நேரத்தில், அறிக்கையின் நகல் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கலைஞர் கிடைத்ததால் நகல்களை ஏடுகள் மூலமாக கலைஞர் வெளியிட்டார்.

சட்டப் பேரவையில் அந்த அறிக்கை மீது விவாதம் நடந்தபோது, ‘அறிக்கை எவ்வாறு வெளியானது, அதற்கு யாரை பழி வாங்குவது என்றெல்லாம் அரசு நேரத்தை செலவிடாமல், அறிக்கையில் கூறியிருப்பது என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார் கலைஞர்..

அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் 1982- பிப்ரவரி 12-இல் மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு சுமார் 200 கிலோமீட்டர் ஒருவாரம்  நடைபயணம் சென்றார் கலைஞர். நடக்க நடக்க காலில் கொப்புளம் ஏற்பட்டதியும் மீறி காலில் கட்டுப்போட்டுக்கொண்டு நடந்தார். வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் எரிச்சலடைந்த எம்.ஜி.ஆர். சட்டசபையை கூட்டினர். அதைப்பற்றி அவையிலே ஆளுங்கட்சி உறுப்பினர், “கருணாநிதி திருச்செந்தூர் போனார், முருகனே அவரைப் பார்க்கப்பிடிக்காமல் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு வந்து விட்டார்!” என்றார் கிண்டலாக. உடனே கலைஞர் எழுந்து, “திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் களவாடப்பட்டது என்று நினைத்தேன். சிலையும் காணாமல் போய்விட்ட விஷயம் இப்போது தான் தெரிகிறது!” என்றார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரால் கூட சிரிப்பை அடக்க முடியவில்லை.

அதன் பிறகு அந்த கமிஷன் என்னச்சு என்றே தெரியவில்லை.

***************************
உங்களின் கேள்விக்கு நன்றி ஏகலைவன்.
இந்த இரு கேள்வியின் பதில்களே மிக நீளமாக இருப்பதால் உங்களின் மற்ற கேள்விகளுக்கான விடை விரைவில்......

இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எனக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறேன். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


Tuesday 13 September 2011

எமெர்ஜென்சி, எம்.ஜி.ஆர்.மரணம், ராஜீவ்கொலை, இமானுவேல் சேகரன்(அரசியல் கேள்வி பதில்கள் பாகம்-2)






எமர்ஜன்சி நீடித்திருந்தால் நாடு உருப்பட்டு இருக்கும் என்று ஒரு கூற்று உண்டு....அது உண்மையா?

நிச்சயமாக இல்லை. தன்னை எதிர்ப்பவர்களை காரணமில்லாமல் கைதுசெய்ய இந்திராகாந்தி பயன்படுத்திய அடக்குமுறை ஆயுதமே எமெர்ஜென்சி. நாடு முன்னேறுவதற்காக இந்திரா எமெர்ஜென்சியை கொண்டு வந்திருந்தால் பின்னாளில் அதற்காக மன்னிப்பு கேட்டாரே அது ஏன்?.
பெருந்தலைவர் காமராஜரே நாடு போச்சு என்றுதானே சொன்னார். அந்த சமயத்தில் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு சஞ்சய்காந்தி ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமில்லை. இந்தியாவில் பிறப்பு விகிதத்தை குறைக்கிறேன் என்று எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட முதல் ஐந்து மாதங்களிலேயே சுமார் 37 லட்சம் பேர்கள் வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டனர். கருத்தடைக்கு ஆள் பிடிக்குமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
அப்படி அறைகுறையாக அல்லது அவசர அவசரமாக கருத்தடை செய்யப்பட்டதால் பலர் செத்து மடிந்தனர். அதேநேரம், அதிகாரிகள், ஊழியர்கள் என்று அனைவருமே சரியான நேரத்திற்கு வந்து ஒழுங்காக வேலை பார்த்தனர். ஸ்ட்ரைக், பந்த் என்று எதுவுமே எமெர்ஜென்சி காலத்தில் நடைபெறவில்லை. கள்ள மார்கெட் ஒழிந்தது போன்றவை ஆறுதலான விஷயங்கள். 
================


எம்ஜிஆரின் மறைவு இயற்கையானதா?...உண்மையில் நடந்தது என்ன?...விளக்க முடியுமா நண்பா!

1987- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி இரவு, தனது ராமாவரம் தோட்டத்தில் உறங்கிக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். நள்ளிரவு 12:30-க்கு(அதாவது 24-ஆம் தேதி) பாத்ரூம் சென்று வந்தவர் சிறிது நேரத்தில் நெஞ்சு வலிக்கிறது என்றார். அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கப்பட்டது. அதை குடித்தவுடன் மயக்கமடைந்து விட்டார் எம்.ஜி.ஆர். டாக்டர்கள் வந்து சிகிட்சை அளித்தனர். ஆனாலும், சிகிட்சை பலனின்றி அதிகாலை 3 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. இதுதான் நடந்தது. 

**************************




ராஜீவ்காந்தியை உண்மையிலேயே கொன்றது யார்...???
அந்த படுகொலையை ஒரு துன்பியல் சம்பவம் என்று சொல்லியிருந்தாரே விடுதலை புலிகளின் தேசியத்தலைவர் பிரபாகரன்...அதன் பிறகுமா இந்த கேள்வி...

=====================

எம்ஜியாரின் மரணம் எப்படிப்பட்டது...???
இந்தக் கேள்விக்கான பதிலை விக்கியில் இரண்டாவது கேள்விக்கான பதிலில் தெரிந்து கொள்ளவும். 

*****************

கேட்டவர்: சுரேஷ் தனபால்
 
இமானுவேல் சேகரன் குறித்து தகவல்கள் அளிக்க முடியுமா?

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூர் கிராமத்தில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் பிறந்தவர் இம்மானுவேல் சேகரன் அவர்கள். சிறுவயதிலேயே இந்திய ராணுவத்தில் சேர்ந்து  அவில்தாராக பணியாற்றிவர். 1953 ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின் தலைவராக இருந்து இராமநாதபுரத்தில் "ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு" நடத்தினார். 1954 ஆம் ஆண்டில் முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினார்.

காமராஜர் இவரைச் சந்தித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற இமானுவேல் காங்கிரசில் இணைந்து ஹரிஜன லீக் காங்கிரசில் உறுப்பினரானார். அச்சமயம் மதுரை, இராமநாதபுர மாவட்டங்களில் தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பணியில் இம்மானுவேல் இணைந்துக் கொண்டார். காமராஜர் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்த கக்கன் அவர்களோடு இம்மானுவேல் இணைந்து தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார்.

1957 செப்டம்பர் 10-ஆம் தேதி  நடந்த தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியர் பனிக்கரால்  ஒரு அமைதி கூட்டம் நடத்தப்பட்டது.அந்த  அமைதிக்கூட்டத்தில் தேவர்கள் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரும், தலித்துகளின் சார்பில் கலந்து ஆறு பேரில் இமானுவேலும் ஒருவர். இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். சமாதானக் கூட்டத்தில் தேவேந்திரர்கள் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முடிவெடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கையெழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தேவேந்திரர்கள் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.

"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் செப்டம்பர் 11-கொலை செய்யப்பட்டார்.
தனக்குச் சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக அமைதிக்கூட்டத்தை புறக்கணித்த  பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின்  ஆட்களே கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு முத்துராமலிங்கதேவர் கைதும் செய்யப்பட்டார்.பின்னர் இம்மானுவேல் சேகரனை  கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் என்ற ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஆனால், அந்த அப்பாவிகள் ஐந்து பேரையும் போலீஸார் கைகளையும், கண்களையும் கட்டி குளக்கரையில் வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொன்றனர் என்று கீழத்தூவல் மக்கள் குற்றம் சாட்டினர். அதனை தொடர்ந்து  நடந்த கலவரத்தில் 85 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அன்றிலிருந்து இன்றுவரை இம்மானுவேல் கொலை செய்யப்பட்ட செப்டம்பர் 11-ஆம் தேதியை குருபூஜையாக அவர் சார்ந்த சமுதாயத்தினர் கொண்டாடுவது வழக்கம். 


இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எனக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறேன். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


Sunday 11 September 2011

இந்திராகாந்தி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், வைகோ, காந்தி, ராஜாஜி(அதிரடி அரசியல் கேள்வி பதில்கள் ஆரம்பம்)


இந்திராகாந்தி- ஜெயலலிதா ஒப்பிடுங்கள்?
இந்திராகாந்தியை பிரதமராக்கியவர் காமராஜர். பின்னர் ஒருகட்டத்தில் காமராஜரையே ஹூ ஈஸ் காமராஜர் என்று  நன்றி இல்லாமல் கேட்டவர் இந்திராகாந்தி. எமெர்ஜென்சி காலத்தில் காமராஜருக்கு நெருக்கமான ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்களையெல்லாம் சிறையில் அடைத்தவர் இந்திரா....எமெர்ஜென்ஸியை பற்றி தன்னை சந்திக்க வந்தவர்களிடமெல்லாம் நாடு போச்சு.. நாடு போச்சு என்று புலம்பியபடியே இருந்தார் பெருந்தலைவர். அந்தக்கவலையிலேயே உயிரிழந்தார்.

அதேபோல்தான் ஜெயலலிதாவும். எம்.ஜி.ஆரின் கட்டளையை மீறி ஜெயலலிதாவிற்க்கு ஆதரவு கொடுத்தவர்கள் சாத்தூரார், பண்ரூட்டியார், திருநாவுக்கரசர், கருப்புசாமி பாண்டியன் போன்றவர்கள். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின் ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ.,-க்களை அணிமாறாமல் இருக்கவைப்பதில் பெரும்பங்கு இவர்களுக்கு உரியது. ஜெயலலிதாவை ஊர் ஊராக அழைத்துப்போய் கூட்டம் நடத்தியவர்கள் இவர்கள். அப்படிப்பட்டவர்களை அ.தி.மு.க., பொதுச்செயலாளரானபின் துரோகியென முத்திரை குத்தி கட்சியை விட்டு நீக்கியவர் ஜெ....ஜெயின் மந்திரிசபையில் இவர்கள் இடம்பெறவே இல்லை.
ஆனால்,எம்.ஜி.ஆர் காலத்தில் ஜெயலலிதாவை தீவிரமாக எதிர்த்த ஆர்.எம்.வீரப்பன், எஸ்.டி.சோமசுந்தரம், முத்துசாமி, பொன்னையன் போன்றவர்களை அமைச்சராக்கியும், பால்கனிப்பாவை என்று விமர்சித்த காளிமுத்துவை சபாநாயகராக்கியும், பி.ஹெச்.பாண்டியனை எம்.எல்.ஏ. வாக்கிய  வேடிக்கையும் நடந்தது. இப்போது சொல்லுங்கள் இந்திராகாந்தியும், ஜெயலலிதாவும் ஒன்றுதானே....

*****************



அ.தி.மு.க சந்தித்த முதல் தேர்தல் எது?

அது ஒரு இடைத்தேர்தல்....தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்,  அ.தி.மு.க.,வை ஆரம்பித்தார். அப்போது(1973) திண்டுக்கல் தொகுதி தி.மு.க., எம்.பி- ராஜங்கம் மரணமடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் தி.மு.க-சார்பில் பொன்.முத்துராமலிங்கமும், அ.தி.மு.க. சார்பில் மாயத்தேவரும், காமராஜரின் பழைய காங்கிரஸ்(ஸ்தாபன காங்கிரஸ்) சார்பில் என்.எஸ்.வி.சித்தனும், இந்திரா காங்கிரஸ் சார்பில் சீமைச்சாமி என்பவரும் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க., வேட்பாளர் மாயத்தேவர் 2,60,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றிபெற்றார். 1,19,000 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தை காமராஜரின் பழைய காங்கிரஸ் வேட்பாளர் சித்தன் பிடித்தார். தி.மு.க.,வின் பொன்.முத்துராமலிங்கம் 93,000 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆனால், இந்திரா காங்கிரசை சேர்ந்த வேட்பாளர் சீமைச்சாமி 11,000 வாக்குகலை பெற்று டெபாசிட் இழந்தார். அந்த வகையில் அ.தி.மு.க., சந்தித்த முதல் தேர்தல் திண்டுக்கல் இடைத்தேர்தல், முதல் அதிமுக., எம்.பி., மாயத்தேவர். 

*****************



மூதறிஞர் ராஜாஜி, காந்திக்கு சம்பந்தியாமே உண்மையா?

ஆமாம். மகாத்மா காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி ராஜாஜியின் மகளான லட்சுமியை காதலித்தார். இதையறிந்த காந்தி இந்தக்காதலை ஆதரிக்கவுமில்லை. எதிர்க்கவுமில்லை. மாறாக, ஐந்து வருடங்கள் நீங்கள் சந்திக்கவே கூடாது, கடிதமும் எழுதிக்கொள்ளக்கூடாது, ஐந்து வருடங்களுக்கு பிறகும் நீங்கள் இதே உறுதியுடன் காதலித்தால் உங்கள் திருமணத்தை நடத்திவைக்கிறேன் என்று நிபந்தனை விதித்தார்.  காந்தியின் நிபந்தனையை ஏற்றுக்கொண்ட இருவரும் அதன்படியே இருந்தனர். ஐந்து வருடங்களுக்கு பிறகு 1933-ஆம் ஆண்டு அவர்கள் திருமணம் புனேயில் நடந்தது. 

******************






எம்.ஜி.ஆர்., தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்று ஆட்சியை பிடித்ததுபோல், வைகோ-வால் முடியவில்லையே?

எம்.ஜி.ஆர்-பிரிந்தபோது இரண்டாம் கட்ட தலைவர்களை தி.மு.க-விலேயே விட்டுவிட்டு  வாக்களிக்கும் தொண்டர்களை அவர் பின்னால் அழைத்துசென்றார். வென்றார். வைகோ- பிரிந்தபோது வாக்களிக்கும் தொண்டர்களை தி.மு.க-விலேயே விட்டுவிட்டு  இரண்டாம் கட்ட தலைவர்களை அவர் பின்னால் அழைத்து சென்றார்.  தோற்றார். 

*************************

இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எனக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறேன். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள். 

உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள்.

உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com




Monday 5 September 2011

அரசியல் பதிவு எழுதும் பதிவர்களுக்கு...


நண்பர்களே......இது அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட தளம்.


More than a Blog Aggregator