Tuesday 16 October 2012

மேல்சபை கலைக்கப்பட்ட வரலாறு




1986-ஆம் ஆண்டு அமரர் எம்.ஜி.ஆர்,தலைமையிலான அப்போதைய அண்ணா தி.மு.க-அரசு  மேல்சபை என்ற மேலவையை கலைத்தது. எதற்காக பாரம்பரியமிக்க மேலவையை கலைத்தார் எம்.ஜி.ஆர்?. அதன் பின்னே ஒரு ஒரு வலுவான அரசியல் காரணம் இருந்தது.

1986-ஆம் ஆண்டு தமிழ் நாடு மேலவை உறுப்பினராக இருந்த மூன்று பேரின் பதவிக்காலம் முடிவடைந்ததால், அந்த இடத்திற்கு அ.தி.மு.க சார்பில் நடிகை வென்னிற ஆடை நிர்மலா, முன்னாள் அமைச்சரும், தற்போதைய கல்வித்தந்தையுமான ஜி.விஸ்வனாதன், எம்.ஜி.ஆரின் வக்கீல் ராகவாச்சாரி ஆகியோரை நிறுத்தி வெற்றிபெற வைத்து எம்.எல்.சி.,ஆக்கினார் எம்.ஜி.ஆர். இவர்களில் வென்னிற ஆடை நிர்மலா ஏற்கனவே இன்சால்வென்சி என்ற திவால் நோட்டீஸ் கொடுத்தவர் என்பதால் அவரை எம்.எல்.சி.,-ஆக விடக்கூடாது என்று சட்டரீதியாக வழக்கு தொடரப்பட்டது. 


வெ.ஆ. நிர்மலா எம்.எல்.சி.,-யாக தொடர வேண்டுமானால், திவால் நோட்டீஸை ரத்து செய்யவேண்டும், அப்படி ரத்து செய்வதாக இருந்தால்...ரூபாய் 10 லட்சம் கட்டவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
வெ.ஆ. நிர்மலா எம்.எல்.சி-யாக தொடர விரும்பிய எம்.ஜி.ஆர்- தானே முன்வந்து வெ.ஆ. நிர்மலாவிற்காக ரூபாய் 10 லட்சத்தை கட்டினார். ஆனாலும், ஏற்கனவே திவாலாகிப்போயிருந்த நிர்மலாவால் எப்படி ஒரே நாளில் ரூபாய் 10 லட்சத்தை கட்டமுடிந்தது என்று மேலவையில் எதிர்கட்சிகளால் ஏற்பட்ட பெரும் அமளியை தொடர்ந்து தனது எம்.எல்.சி-பதவியை ராஜினாமா செய்தார் நிர்மலா.


இதை தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதிய எம்.ஜி.ஆர்- மேல்சபை என்று ஒன்று இருந்தால்தானே என்று முடிவு செய்து மேலவையை கலைக்க உத்தரவிட்டார். அந்த நேரத்தில் மேல்சபை எதிர்கட்சி தலைவராக இருந்தவர் கலைஞர். (மேலவையில் கலைஞர் எப்படி வந்தார் என்று நினைப்பவர்களுக்கு ஒரு ஃபிளாஷ்பேக்....1980-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அண்ணா நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்...1983-இல் இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளான குட்டிமணி உட்பட 37 பேர்கள் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் இனக்கலவரம் வெடித்தது. அதன் தொடர்சியாக சிங்களர்கள் மீது போர் தொடுத்தார் பிரபாகரன்.இந்தப்போரை காரணம் காட்டி இலங்கை ராணுவத்தினர் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தனர். இதனால் கோபமுற்ற கலைஞரும், பேராசிரியர் அன்பழகனும் மத்தியஅரசு அப்பாவி இலங்கை தமிழர்களை காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்று குற்றம்சாட்டி தம் எம்.எல்.ஏ-பதவியை ராஜினாமா செய்தனர்.அதன் பிறகு சிலமாதங்களில் எம்.எல்.சியாக மேலவையில் நுழைந்தார் கலைஞர். தான் எம்.எல்.சி-யாக இருந்த காரணத்தினால் 1984-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடவில்லை கலைஞர்....1956-ஆம் ஆண்டில் முதன்முதலில் தேர்தலை சந்தித்தது தி.மு.க, அந்த தேர்தலிலிருந்து 2011-ஆம் ஆண்டு வரை  நடந்த அத்தனை தேர்தலிலும் போட்டியிட்ட கலைஞர் 1984-இல் மட்டும் போட்டியிடவில்லை என்பது கூடுதல் தகவல்.ஓக்கே....பிளாஷ்பேக் முடிந்தது).

மேலவையை கலைக்கும் முடிவை எம்.ஜி.ஆர் அறிவித்ததும்  நான் மேலவையின் எதிர்கட்சித்தலைவராக இருப்பதால்தான் இதை கலைத்துவிட எம்.ஜி.ஆர்-முடிவெடுத்திருப்பதாக அறிகிறேன். நான் இல்லாவிட்டால் இந்த மேலவை நீடிக்கும் என்றால் நான் எனது எம்.எல்.சி-பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன் என்று உருக்கமாக அறிவித்தார் கலைஞர். அப்போது மேலவை தலைவராக இருந்த ம.பொ.சிவஞானம் அவர்களும் பாரம்பரிய மிக்க மேலவையை எம்.ஜி.ஆர் கலைக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.




ஆனால், அதையெல்லாம் புறந்தள்ளிய எம்.ஜி.ஆர், மேலவையை கலைக்கும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி, அதற்கு அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி, ஜனாதிபதி ஜெயில்சிங் ஆகியோரிடம் ஒப்புதலும் பெற்றார். அப்பொதைய மேலவையின் மொத்த இடங்கள்=63. அதில் 31 இடங்கள் காலியாக இருந்தது.

கலைக்கப்பட்ட மேலவையிலிருந்து எம்.எல்.சியாக தேர்வு செய்யப்பட்ட ஹண்டே, முகம்மது யூசுப் ஆகியோர் அப்போதைய எம்.ஜி.ஆர், அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தனர். மேலும், அண்ணா தி.மு.க-சார்பில் மதுசூதனன், ஜேப்பியார், கவிஞர் முத்துராமலிங்கம் உட்பட 14 பேர்களும், தி.மு.க சார்பில் கலைஞர், சாதிக்பாட்சா, PTR.பழனிவேல்ராஜன் உட்பட 7 பேர்களும், பதவியிழந்தனர்.

எம்.எல்.சி-பதவியிழந்தவர்கள் அமைச்சராக நீடிக்க முடியாது என்பதால்...ஹண்டே, முகம்மது யூசுப் ஆகியோரை அமைச்சரவையிலிருந்து நீக்கினார் எம்.ஜி.ஆர்.

இவ்வளவுதான் மேலவை கலைக்கப்பட்ட வரலாறு.....எனக்கு தெரிந்த, கேள்விப்பட்ட, படித்த விஷயங்களை தொகுத்து தந்துள்ளேன்...இதில் ஏதேனும் தவறிருந்தால் அல்லது திருத்தம் இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்களேன்.

========================================


இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


Wednesday 3 October 2012

ம.தி.மு.க. நாஞ்சில் சம்பத்துடன் ஒரு பேட்டி - 3




                                                             
ராஜாராமன்:  இது நாஞ்சில் சம்பத்துக்கான கேள்வி. இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சினை பார்த்து 'நீ களத்தில் ஆடாதே. கேலரியில் நின்று வேடிக்கை பார்' என்று சொல்வது எப்படி இருக்குமோ அது போல தமிழக அரசியல் பேச்சாளர்களில் குறிப்பிடத்தக்க நீங்கள் இந்த தேர்தல் புறக்கணிப்பால் ஏற்படும் ஓய்வை எப்படி உணர்கிறீர்கள்?  தங்கள் பேச்சை கேட்க விரும்பும் ரசிகர்கள் பலருண்டே...

சம்பத்: தமிழ்நாட்டில் இருப்பவை எல்லாம் கட்சிகள். ம.தி.மு.க. மட்டும்தான் இயக்கம். வேறு சில கட்சிகளில் இருக்கும் பேச்சாளர்கள் கூலிக்கு பேசுபவர்கள். நான் கொள்கைக்கு பேசுபவன்.  நான் அகரம் எழுதியபொழுது, ஆகாரம் அள்ளி சாப்பிட்ட பொழுதே தமிழ் என்னை சிகரத்தை நோக்கி பயணிக்க வைத்தது. அம்புலியும், ஆகாயமும் என் தாயால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பொழுதே எனக்கு தமிழும் அறிமுகம் ஆனது. பள்ளி, கல்லூரி நாட்களில் என்னுடன் கை குலுக்கியது தமிழ். நான் அரசியல், இலக்கிய மேடைகளில் அடி எடுத்து வைக்கையில் கரம் தந்தது தமிழ். நாளை நான் இறந்தபின் ஆழமாக குழி தோண்டி புதைக்கிற பொழுது, என்னுடைய சொந்தங்கள் எந்தத்தமிழில் அங்கே ஓலம் போட்டு சோக கீதத்தை உருவாக்குவார்களோ..அந்தத்தமிழின் மீட்சிக்கும், அந்தத்தமிழின மீட்புக்கும் வைகோ மட்டும்தான் களத்தில் நிற்பார். 

கூலிக்கு பேசுபவர்களோடு என்னை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். ம.தி.மு.க.விற்கு இது தவக்காலம். இதை தொய்வென்று கருதவில்லை. நான் நித்தம் பல ஊடகங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் பேட்டி தந்து வருகிறேன். ஆகவே ஆடிக்காற்றே வீசினாலும், ஐப்பசி மாத அடைமழையே கொட்டினாலும் எங்கள் கட்சி களத்தில் நிற்கும். மக்களுக்காக போராடும். ஓய்வுக்கும் எங்களுக்கும் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை.  எனவே ஓய்வுதான் எங்கள் கட்சியினரைக்கண்டு பொறாமைப்படுமே தவிர நாங்கள் ஓய்வெடுக்க உத்தேசித்ததே இல்லை. 

ராஜாராமன்: சட்டசபை தேர்தலில் வைகோ பார்வையாளராக அமர வைக்கப்பட்டுள்ளார். இதன் பின்புலத்தில் இருப்பவர் யார் என்று நினைக்கிறீர்கள்? இதற்கு ராஜபக்சேவும் ஒரு காரணம் என்று ஒரு செய்தி உலவுகிறதே? இது பற்றி தங்கள் கருத்தென்ன?  

சம்பத்: இது என்னைப்பொறுத்தவரை உண்மைதான். நாடாளுமன்றத்தில் இலங்கைத்தமிழர்களுக்காக 54 கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வந்தவர் வைகோ. ஒரே பிரச்சனைக்காக இத்தனை முறை கவன ஈர்ப்புகளை எவரும் கொண்டுவந்ததில்லை. ஆகவே வைகோவின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க கூடாது என்று சதி செய்யப்பட்டிருக்கலாம். 

ராஜாராமன்: '10-15 சீட்டுகளுக்கு உடன்பாடு ஏற்பட்டு வைகோ எங்களுடன் வந்திருக்க வாய்ப்பு இருந்தது' என்று அ.தி.மு.க. தோழர்கள் கருதியதாக செய்தி இருந்தது..ஆனால் இறுதியில் தங்கள் கட்சியை புறக்கணித்து விட்டனரே..

சம்பத்: அ.தி.மு.க. தரப்பில் சொல்கிறார்களா? அவர்களுக்கு அரசியலே தெரியாது.... அவர்களுக்கு இண்டர்நேஷனல் சதியைப்பற்றி என்ன தெரியும்? அவர்கள் பாவம் அப்பாவிகள். அவர்கள் மீது நான் குறை சொல்ல விரும்பவில்லை. 

ராஜாராமன்: இன்றிருக்கும் கட்சிகள் திராவிட கொள்கைகளை பெரிதாக பின்பற்றவில்லை. தமிழகத்தின் பகுத்தறிவு பாதை என்பது சீரழிவில் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் சாமியார்கள், மடங்கள். பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிறது. மக்களிடையே பகுத்தறிவு கொள்கையை பரப்பும் முயற்சில் ம.தி.மு.க. எந்த அளவு தீவிரமாக இருக்கிறது? 

சம்பத்: வெகுஜன மக்கள் இந்த நாட்டில் பக்தர்களாகத்தான் உள்ளனர்.  அவர்கள் மத நம்பிக்கையில் நாங்கள் குறுக்கிட மாட்டோம். இது இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமை. நாங்கள் பகுத்தறிவாளர்கள்தான். அதன் அடையாளம்தான் இந்த கருப்புத்துண்டு. எம கண்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தவர் வைகோ. கருப்புத்துண்டு அணியாமல் இருந்தால் வெற்றி கிடைக்கும் என்று ஆரூடம் சொன்னபோது அதை நிராகரித்தவர் அவர்.   ஆனால்  பகுத்தறிவை பரப்ப ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல இது. இதெல்லாம் ஒரு சின்ன கூறுதான். நாங்கள் வெற்றிச்சரித்திரம் படைக்கையில் பகுத்தறிவு சிந்தனைகளை மேலும் மக்களுக்கு கொண்டு செல்வோம்.

ராஜாராமன்: முன்பெல்லாம் அரசியல் பயிற்சி வகுப்புகள் என்பவை  இன்றியமையாததாக இருந்தன. இதை இடதுசாரிகள் தொடர்ந்து செய்து வந்தனர். ஆனால் இப்போது அவற்றை நிறுத்திவிட்டனர். இம்மாதிரி பயிற்சி வகுப்புகளை நடத்துவதில் ம.தி.மு.க.வின் செயல்பாடுகள் என்ன?

சம்பத்: கூட்டங்களுக்கு நட்சத்திர வேல்யூ உள்ளவர்கள் பேசினால்தான் கேட்க வருகிறார்கள். இதற்கு காரணம் ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம். இம்மாயைகள் விரைவில் அகலும். என்னைவிட நன்றாக பேசுவோர் இவ்வியக்கத்தில் உள்ளனர். தொண்டர்களுக்கு மட்டுமல்ல. மாவட்ட செயலாளர்களுக்கும் இப்பயிற்சி வகுப்புகள் அவசியம். இதை தீவிரமாக செயல்படுத்த எங்கள் கட்சி ஆவன செய்யும்.
ராஜாராமன்: கணினியை உபயோகிக்கும் இளைஞர்கள் பெருகிவரும் காலமிது. அவர்களுக்கு உங்கள் செய்தி என்ன? 

சம்பத்: சவால்கள் நிறைந்த உலகமிது. அமெரிக்க நிதி நிலை சீராக இல்லை. இயற்கை பேரழிவை ஜப்பான் சந்திக்கிறது. அனைத்து செய்திகளையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் வேண்டும்.  இந்த நாட்டில் உள்ள இளைஞர்கள் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும். 'ஓடிக்கொண்டே இருக்கிறேன். எங்கே இருக்கிறது என் சிகரம்? தேடிக்கொண்டே இருக்கிறேன். எங்கே உள்ளது என் புதையல்? பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன். எங்கே உள்ளது என் அமைதிக்கான தீவு?' என்று நாடாளுமன்றத்தில் அப்துல் கலாம் அவர்கள் வாசித்தார்கள். அதைப்பின்பற்றி உங்கள் தேடலை துவக்குங்கள். நுகர்வு கலாச்சாரம் எனும் விலங்கால் நீங்களும், நானும் பூட்டப்பட்டு இருக்கிறோம். 

உலக, தாராள, தனியார், நவீன மயமாக்கல்கள் எனும் மாயப்பிசாசுகள் நம் அனுமதி இன்றியே நம்மை அழுத்துகின்ற சூழலில் எந்தக்கட்டத்திலும் ஒழுக்கத்தை இழந்து விடாதீர்கள். நேர்மையை காவு குடுத்து விடாதீர்கள். கொள்கை சார்ந்த இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற முடியாவிடினும், அப்பழுக்கற்றவர்களாக, ஆகாயத்தை போல் பரிசுத்தமானவர்களாக உங்களை ஆக்கிக்கொள்ளுங்கள். சவால்கள் நிறைந்த உலகத்தில் உங்களை தக்க வைத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டி வரும். அதில் இந்த தேசத்து இளைஞர்கள் வெற்றி பெற வேண்டுமென்று நான் வாழ்த்துகிறேன். 
                                              

எனது கேள்விகளுக்கு சம்பத் அவர்களின் பதில்கள்:

கேள்வி: தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் அதை இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் என்று கூறி போராட்டம் நடத்தாமல் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர் என்று உங்களைப்போன்ற கட்சிகள் சொல்லி வருவதால்தான்   வட இந்திய மக்கள் மற்றும் ஊடகங்கள் இதற்கு பெரிதும் செவி சாய்ப்பதில்லை என்று கூறுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: தமிழன் தாக்கப்பட்டால் வடக்கு ஏன் மௌனம் சாதிக்கிறது?  இந்தியா ஒரு இணைக்கப்பட்ட துணைக்கண்டம். இங்கு நடைபெற்று வருவது ஒரு கலாச்சார யுத்தம். இதை நேருவே தன் மகள் இந்திராவிற்கு எழுதிய கடிதத்தில் பதிவு செய்துள்ளார். இந்திய வரலாறு தெரியாதவர்கள் இப்படிப்பட்ட செயல்களை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு இதை தெளிவுபடுத்த வேண்டியது நம் கடமை.

கேள்வி: சென்னை போன்ற பெருநகரங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் IT/BPO துறையில் வேலை செய்து வருகின்றனர். ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களின் வாயிலாக அரசியல் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அவர்களில் கணிசமான இளைஞர்கள்  குறிப்பிட்ட கட்சி சாராத நபர்களாக உள்ளனர். அவர்களை ஈர்க்க ம.தி.மு.க. என்ன திட்டம் வைத்துள்ளது?

பதில்: வைகோ மற்றும் நான் பேசும் கூட்டங்களில் கட்சி சாராத பல இளைஞர்கள் எங்கள் பேச்சை கேட்க வருகின்றனர். உடனடியாக இளைஞர்களை சேர்க்கும் திட்டத்தை துவங்க எண்ணியுள்ளோம்.  அவர்களுடைய பெயர்,முகவரி,புகைப்படத்தை பெற்றுக்கொண்டு உடனுக்குடன் உறுப்பினர் அட்டையை தர உள்ளோம். அதுபோல கட்சியின் வாழ்நாள் உறுப்பினராக இளையோரை சேர்க்கவும் திட்டமுள்ளது. கல்லூரி தோறும் வாயில் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். புதிதாக கட்சிக்கு வரும் இளைஞர்களுக்கு பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரா தெரியாது. ஆகவே விடுதலை உணர்வு, இன உணர்வு, கொள்கையிலே சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த தலைவர்களின் கதை போன்றவற்றை புதிய இளைஞர்களுக்கு இன்னும் அதிகமாக கொண்டு செல்ல மாவட்டம் தோறும் பயிற்சி முகாம் நடத்த திட்டம் உள்ளது. இது வெற்றி பெற்றால் இளைஞர்களை நாங்கள் தக்க வைத்து கொள்வோம் என நம்புகிறேன்.

கேள்வி:  ம.தி.மு.க. போன்ற கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதை விரும்பாத நடுநிலையானவர்களும் உண்டு. வெற்றியோ தோல்வியோ தேர்தலில் நிற்பதன் மூலம் தற்போதைய காலகட்டத்தில் தம் கட்சியின் பலம் என்ன என்பதை சோதித்து பார்க்கும் வாய்ப்பை ஏன் இது போன்ற புறக்கணிப்புகளின் மூலம் தவற விடுகிறீர்கள்? ம.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என என்னும் மக்களுக்கு இது ஏமாற்றத்தை தருமல்லவா?

பதில்: வேறு வழியில்லை. இது பேய்க்கும், பிசாசுக்கும் நடக்கிற சண்டை. குறுக்கே பசு போய் மாட்டிக்கொள்ளக்கூடாது. ஒதுங்கி கொள்வதுதான் நல்லது.கடந்த காலத்தில் நாங்கள் சிலமுறை தனியாக களம் கண்டிருக்கிறோம்.அதில் கசப்பான படிப்பினைகளையும் நாங்கள் பெற்றிருக்கிறோம். தி.மு.க.வில் பகுதி செயலாளராக இருந்தவர், அரசியலில் ஆயிரம் பிறை கண்டவர், இன்றைக்கு திருச்சி மாநகரத்தின் தட்ப வெட்பத்தை துல்லியமாக தெரிந்து ஆட்டிப்படைக்கின்ற ஆற்றலாளர் எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மலர் மன்னன்.  இவர் பிள்ளைமார் வகுப்பை சார்ந்தவர். அவருடைய சொந்த பந்தங்கள் ஓட்டு போட்டாலே 30,000 வாக்குகள் வரும். ஆனால் தனியாக நின்று அவர் வாங்கிய ஓட்டுகள் வெறும் 3,000 தான். இது எங்கள் வலிமை குறைந்ததைத்தான் ஊருக்கு உணர்த்தும். கையை பொத்தி வைத்திருப்பது இப்போதைக்கு நல்லது. என்ன இருக்கிறதென்று எவருக்கும் தெரியாது. ஆகவே இது ஒரு தற்காலிகமான ஏற்பாடுதான். பதுங்கி இருக்கிறோம் பாய்வதற்காக. ஒதுங்கி இருக்கிறோம் ஓங்குவதற்காக.

இத்துடன் பேட்டி நிறைவு பெறுகிறது.
.............................................................................................


Tuesday 2 October 2012

காந்தி ஏன் சுடப்பட்டார்?- கோட்சேயின் வாக்குமூலம்




1948 ஜனவரி 30ந்தேதி வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாள். அன்று மாலை 4.30 மணிக்கு கோட்சே, ஆப்தே, கார்கரே ஆகிய மூவரும் ஒரு சாரட்டு வண்டியில் ஏறி பிர்லா மாளிகைக்குச் சென்றார்கள். 4.45 மணிக்கு பிர்லா மாளிகையை அடைந்தார்கள். பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு காந்திஜி வரும் வழியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டார்கள்.


காந்தி பிரார்த்தனை மண்டபத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும்போது அவரை சுட்டுவிடவேண்டும் என்பதே கோட்சேயின் திட்டம். இப்போது அவன் திட்டத்தை மாற்றிக்கொண்டான். காந்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு செல்லும்போது வழியிலேயே சுட்டுவிடுவது நல்லது என்று இப்போது அவனுக்குத் தோன்றியது.



"காந்தி எப்போது வருவார்?" என்று மூவரும் படபடப்புடனும், பதைபதைப்புடனும் காத்திருந்தார்கள். வழக்கமாக சரியாக ஐந்து மணிக்கு பிரார்த்தனைக் கூட்டம் ஆரம்பமாகிவிடும். அன்றைய தினம் காந்திஜியை சந்தித்துப்பேச உள் விவகார மந்திரி சர்தார் பட்டேல் வந்திருந்தார்.
பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்படுவதும், அதுபற்றி அவர்கள் காந்தியிடம் முறையிடுவதும், இருவரையும் காந்தி அழைத்து சமாதானம் செய்வதும் வழக்கமாக இருந்தது. அன்றும் நேருவுடன் ஏற்பட்டுள்ள தகராறு பற்றி காந்தியிடம் பட்டேல் முறையிட்டார். "இருவரும் இவ்வாறு அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது நல்லதல்ல" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரம் ஆகிவிட்டதை ஆபா காந்தி நினைவூட்டினார்.



"நீங்கள் நாளை வாருங்கள். இதுபற்றி மீண்டும் பேசுவோம்" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி இருவரும் காந்தியின் இருபுறமும் வர, அவர்களுடைய தோள்களில் கை வைத்தபடி காந்தி நடந்தார். ஆபாவுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டு சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். பத்து நிமிடம் தாமதமாகிவிட்டதால் காந்திஜி சற்று வேகமாக நடந்தார். கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று வணங்கி வழிவிட்டனர். பதிலுக்கு காந்தியும் கை கூப்பி வணங்கியபடி நடந்தார். காந்தி வழக்கமாக செல்லும் பாதை வழியே செல்லாமல் குறுக்குப்பாதையில் சென்றார். கோட்சே நின்ற பாதை வழியாகத்தான் அவர் செல்லவேண்டும். "நம் எண்ணம் எளிதாக நிறைவேறப்போகிறது" என்று நினைத்தான் கோட்சே.
யாரும் அறியாதவாறு இடுப்பிலிருந்த சிறிய துப்பாக்கியை எடுத்தான். 


இரு கைகளுக்கு இடையே அதை மறைத்துக்கொண்டான். சுடுவதற்குத் தயாராக விசையை இழுத்து வைத்தான். காந்தி நெருங்கியபோது கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேறினான். காந்தியின் பாதங்களைத்தொட்டு வணங்கும் நோக்கத்துடன் அவன் வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலைத் தொட்டு வணங்குவதை காந்தி விரும்புவதில்லை.
எனவே "வேண்டாம்! பாபு விரும்பமாட்டார்" என்று மனு காந்தி தடுத்தார். மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளினான் கோட்சே. மனு காந்தியின் கையில் இருந்த காந்தியடிகளின் நோட்டுப்புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே சிதறி விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக மனு காந்தி கிழே குனிந்தார். கண் மூடி கண் திறப்பதற்குள் காந்திக்கு எதிரே நின்று அவர் மார்பை நோக்கி மூன்று முறை சுட்டான் கோட்சே. குண்டுகள் குறி தவறாமல் காந்திஜியின் நெஞ்சில் பாய்ந்தன. இரண்டு குண்டுகள், நெஞ்சை ஊடுருவி முதுகு வழியாக வெளியே சென்று விட்டன. ஒரு குண்டு இருதயத்தில் தங்கிவிட்டது. முதல் குண்டு பாய்ந்ததும் காந்திஜியின் கால்கள் தடுமாறின.
இரண்டாவது குண்டு பாய்ந்ததும் ரத்தம் பீறிட்டு அவருடைய உடையை நனைத்தது. 


"ஹே...ராம்" என்று அவர் இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும் தரையில் ஈரமண்ணிலும், புல் தரையிலும் சாய்ந்தார். அப்போது மணி 5.17. இவ்வளவும் அரை நிமிடத்திற்குள் நடந்து முடிந்துவிட்டன. என்ன நடக்கிறது என்பதை உணரக்கூட சக்தியற்றவர்களாய் கூடியிருந்தவர்கள் அப்படியே திகைத்து நின்றார்கள்.


சுட்டவுடன் கோட்சே தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. புகையும் துப்பாக்கியுடன் அப்படியே சிலை மாதிரி நின்றான். காந்தி சுடப்பட்டார் என்பதை உணர்ந்ததும் சுற்றிலும் நின்றவர்கள் பாய்ந்து சென்று துப்பாக்கியுடன் நின்ற கோட்சேயைப் பிடித்துக் கொண்டனர். சிலர்"துரோகி! கொலைகாரா!" என்று ஆத்திரமாக கூக்குரலிட்டபடி அவனைத் தாக்கத் தொடங்கினார்கள். பலமாக தாக்கப்பட்ட கோட்சேக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இன்னும் சிறிது நேரம் ஆகியிருந்தால் அவன் அடித்துக் கொல்லப்பட்டிருப்பான்.



போலீசார் விரைந்து வந்து அவனை மீட்டு அங்கிருந்து இழுத்துச்சென்றனர். காந்தியைக் கோட்சே சுடுவதையும் குண்டு பாய்ந்து காந்தி கீழே விழுவதையும் சற்று தூரத்தில் இருந்து ஆப்தேயும், கார்கரேயும் பார்த்தார்கள். இனி அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து பிர்லா மாளிகையில் இருந்து நழுவி வெளியே வந்தார்கள். ஒரு சாரட்டு வண்டியைப் பிடித்து அங்கிருந்து புறப்பட்டார்கள். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்திருந்த பெண் டாக்டர் ஒருவர் காந்தி கிடந்த இடத்துக்கு ஓடோடி வந்தார்.
அவர் தலையை மடியில் வைத்துக்கொண்டு நாடித்துடிப்பை பரிசோதித்தார். காந்தியின் உடலில் உயிர் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் வாய் ஏதோ முணுமுணுத்தது. உடனே ஒரு தேக்கரண்டியில் தேனும், வெந்நீரும் அவருக்குக் கொடுத்தார்கள். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது. 


தேனும், வெந்நீரும் வாய்க்குள் செல்லாமல் வெளியே வடிந்துவிட்டது.
டாக்டர் பார்க்கவா வந்து பரிசோதித்துவிட்டு, "காந்தி நம்மைப் பிரிந்துவிட்டார். உயிர் போய்விட்டது" என்று துயரத்துடன் அறிவித்தார். கூடியிருந்தவர்கள் கூக்குரலிட்டு அழுதனர். காந்தி மரணச்செய்தியை சரியாக மாலை 6 மணிக்கு அகில இந்திய ரேடியோ அதிகாரபூர்வமாக அறிவித்தது.


கைது செய்யப்பட்ட கோட்சே டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் காந்தியை எதற்காக கொன்றேன் என்று   வாக்குமூலம் அளித்தான். வாக்கு மூலத்தை அப்படியே தருகிறேன் படியுங்கள்.

காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை.
ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்.

தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.

காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.

பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.

சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.

முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.

15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான். "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.

பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.




சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.

பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. `கொலைக்கு நானே பொறுப்பு' என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.

1948 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினான்



குறிப்பு: இது இனையத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஒருவேளை இது தவறான செய்தியாகக்கூட இருக்கலாம். தவறிருந்தால் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். 


============================================================

இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எனக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறேன். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com
இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


Saturday 29 September 2012

ம.தி.மு.க. நாஞ்சில் சம்பத்துடன் ஒரு பேட்டி - 2


ராஜாராமன்: கட்சியின் செயல்பாடுகள், நோக்கங்களை மக்களிடம் கொண்டு செல்ல ம.தி.மு.க. வசம் ஊடக, பத்திரிக்கை பலம் இல்லை. புதிதாக வந்த தே.மு.தி.க.விற்கு கூட தனித்தொலைக்காட்சி இருக்கிறது. இந்த பலவீனத்தை ம.தி.மு.க. எப்படி எதிர்கொள்ளப்போகிறது? 

சம்பத்: தற்போது இமயம் தொலைக்காட்சிதான் வைகோவின் பேச்சு மற்றும் கட்சியின் நடவடிக்கைகளை காட்டி வருகிறது. இமயத்தைதான் நாங்கள் இப்போது இமையாக கருதுகிறோம். எங்கள் சுமைகளை அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் நஷ்டத்தில் இருக்கிறார்கள். நாங்கள் கஷ்டத்தில் இருக்கிறோம். வரும் காலத்தில் இமயம் இமயத்தை எட்டும். 

ராஜாராமன்உங்கள் கட்சிக்கென ஒரு தொலைக்காட்சியை தொடங்கும் எண்ணம் வைகோவிற்கு உள்ளதா?

சம்பத்: எண்ணம் இருக்கிறது. மூலதனம் இல்லை. 

ராஜாராமன்: தமிழ், தமிழர் நலன் எனும் அடிப்படையில் ம.தி.மு.க மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டாலும்,தங்கள் கட்சி மீது ஜாதிய முத்திரை விழுந்துள்ளது. குறிப்பிட்ட சமுதாய மக்களின் தலைவன், அந்த மக்களின் ஓட்டை தனக்கு சாதகமாக்க நினைக்கின்ற மனிதர் என்றும் வைகோ மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளதே? இந்த முத்திரையை நீக்க என்ன செய்யப்போகிறது கட்சி?

சம்பத்: இது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு. தென்சென்னை மாவட்ட செயலாளர் மணிமாறன் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர். திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் முதலியார் வகுப்பை சார்ந்தவர். வடசென்னை மாவட்ட செயலாளர் பர்மாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்த தமிழர். காஞ்சி மாவட்ட செயலாளர் வன்னியர் வகுப்பை சேர்ந்தவர்.கட்சியின் அவைத்தலைவர் கொங்கு வேளாளர். துணைப்பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன்   முக்குலத்தோர் வகுப்பை சார்ந்தவர். ஆகவே எங்கள் மீது ஜாதி முத்திரை குத்துபவர்களுக்கு பதில் சொல்வதே தவறு. 

                                                                  சதீஷ், நாஞ்சில் சம்பத், ராஜாராமன்

ராஜாராமன்: ம.தி.மு.க. துவங்கப்பட்ட நேரத்தில் தி.மு.க.வின் இரண்டாம் மட்ட தலைவர்கள் பலர் அதில் இணைந்தனர். ஆனால் இப்போது பலர் வேறு கட்சிக்கு சென்று விட்டனர். இப்போது குறிப்பட்டு சொல்லக்கூடிய இரண்டாம் மட்ட தலைவர்கள் உங்கள் கட்சியில் இல்லை. ஒன் மேன் ஆர்மியாக கட்சியை நடத்தி செல்கிறார் வைகோ. அவருக்கு அடுத்த வலுவான தலைவர்களை கட்சி உருவாக்கி வருகிறதா? 

சம்பத்: கட்சியின் பிரச்சார செயலாளராக நான் உள்ளேன். எங்கள் கட்சியின் இளைஞர் அணிச்செயலாளர் அழகுசுந்தரம் 19 மாத காலம் எட்டுக்கு நாலு கொட்டடியில் கருத்துரிமைக்கு காப்புரிமை பெற்றுத்தருவதற்கு வைகோவுடன் சிறையில் இருந்தவர். மாணவர் அணிச்செயலாளர் ராஜேந்திரன் சிறப்பாக செயல்படுகிறார். நீங்கள் சொன்னது போல் ஊடக, பத்திரிகை பலம் இல்லாததால் நாங்கள் இருட்டடிப்புக்கு ஆளாக்க பட்டிருக்கிறோம்.தமிழகத்தில் அடுத்த தலைமுறையின் கையில் ஒப்படைக்கப்பட்டிருப்பது ம.தி.மு.க.வில் மட்டும்தான். தி.மு.க.வில் பொருளாளராகவும் மு.க.ஸ்டாலின்தான் இருக்கிறார்.இளைஞர் அணிச்செயலாளராகவும் அவர்தான் இருக்கிறார். தி.மு.க.வில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது. கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்கின்ற இளைய தலைமுறை எங்கள் கட்சியில்தான் அதிகம். 

ராஜாராமன்: வைகோ சிறந்த நாடாளுமன்றவாதி. மக்கள் நலனுக்கு போராடும் அரசியல்வாதி போன்ற சில தனித்தன்மைகள் அவருக்குண்டு. இருப்பினும் 1996 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து ம.தி.மு.க. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் சூழலுக்கு பலியானது. இது ஒரு நல்ல தலைவனுக்கு அழகா? 

சம்பத்: நிலைமையை நாங்கள் உருவாக்கவில்லை. நிலைமைதான் எங்களை உருவாக்கி இருக்கிறது. அ.தி.மு.க.வோடு ரத்தமும், சதையுமாக இணைந்து இருந்தோம். ஒரு கோடியில் பூத்த இரு மலர்களாக நாங்கள் களத்தில் நின்றோம். கருணாநிதியின் குடும்ப பாசிச ஆட்சிக்கு எதிராக அ.தி.மு.க.வுடன் இணைந்தோம்.இப்படி ஒரு முடிவை ஜெயலலிதா எடுப்பார் என்று யூகிக்க முடியவில்லை. அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தோம். ஆகவே நாங்கள் நிலைமையை உருவாக்கவில்லை.

ராஜாராமன்: அ.தி.மு.க. விஜயகாந்த் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் வழங்குவதன் மூலம் உங்களுக்கு இடங்கள் மேலும் குறையலாம். இறுதி நேரத்தில் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள் என்று உங்களுக்கு முன் கூட்டியே தெரியாதா?


சம்பத்: தெரியாது. நாங்கள் விசுவாசமாக இருந்தோம். கள்ளம் கபடமின்றி இருந்தோம். கூட்டணிக்கு துரோகம் செய்யாமல் இருந்தோம். அதற்கான பரிசை அவர்கள் தந்திருக்கிறார்கள். வைகோ பரிசுத்தமானவர் என்று சமூகம் இப்போது ஒரு அங்கீகாரத்தை தந்திருக்கிறது. தி.மு.க. தொண்டர்களின் பால் எங்கள் மீது ஒரு கௌரவம்,  அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் மீது காட்டும் அனுதாபம், பொதுமக்கள் எங்கள் மீது கொண்டுள்ள பச்சாதாபம், உலக தமிழர்கள் எங்கள் மீது வைத்துள்ள நன்மதிப்பு போன்றவைக்கு  இச்சூழல் வழி வகுத்து உள்ளது. நாங்கள் தவறு இழைக்கவில்லை. இதை தாக்குபிடிக்கும் ஆண்மை எங்களுக்கு உள்ளதே அதுதான் எங்களுக்கு இருக்கிற ஒரே சவால்.


ராஜாராமன்: தேர்தல் புறக்கணிப்பால் ஒன்றிய, நகர, மாவட்ட செயலாளர்கள் போன்றோர் வேறு கட்சிக்கு தாவ வாய்ப்பு இருக்கிறதே?


சம்பத்: கலசங்கள் விழுவதால் கோபுரங்கள் சாயப்போவதில்லை. கலசங்கள் கீழே விழத்தான் செய்யும். ம.தி.மு.க. ஒரு வெண்கலப்பானை. கீழே விழும். சத்தம் கேட்கும். ஆனால் உடையாது. கண்ணப்பன் போனார். அவர் வைகோவை விட சீனியர் பொலிட்டீசியன். அவர் கட்சியை விட்டு போகையில் அவருக்கு 40 ஆண்டுகாலம் காரோட்டிய கந்தனூர் கருப்பையா என்பவர் போகவில்லை. அதேபோல கண்ணப்பனை சார்ந்திருந்த ஆலாம்பாளையம் கிளைக்கழகத்தின் செயலாளர் போகவில்லை. செஞ்சி ராமச்சந்திரனும் போனார். ஒரு பாதிப்பும் இல்லை. ஆகவே எங்கள் கட்சியில் இருந்து யார் போனாலும் அவர்கள் அகதிகள் பட்டியலில் போய் சிக்கிக்கொள்கிறார்களே தவிர அரசியலில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.


ம.தி.மு.க. என்பது தேன். தேன் தானும் கெடாது. தன்னை சார்ந்து இருப்பவர்களையும் கெட விடாது. இந்த இயக்கத்தில் இருந்தால் மரியாதை. அதை விட்டு போனால் அவமரியாதை என்பதை வரலாறு பல பேருக்கு கற்பித்து கொடுத்துள்ளது. ஆகவே எங்கள் கட்சி ஒரு முடிவை எடுப்பதை ஏற்க முடியாதவர்கள், பதவி நல விரும்பிகள், ஆதாயத்தை நாடுபவர்கள் கட்சிக்கு துரோகம் செய்தால் அவர்கள் காணாமல் போவார்களே தவிர கட்சியின் கட்டுமானத்தில் ஒரு கல்லை கூட பெயர்க்க முடியாது. 

தொடரும்...


Friday 28 September 2012

ம.தி.மு.க. நாஞ்சில் சம்பத்துடன் ஒரு பேட்டி





ம.தி.மு.கவின் கொள்க விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத்துடனான இந்த நேர்காணல் நடந்தது சென்ற ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த சில நாட்களுக்கு முன்பு. பேட்டிக்கு ஏற்பாடு செய்தது பதிவர் ராஜாராமன்(விந்தை மனிதன்) அவர்கள். மொத்தப்பேட்டியும் அலைபேசியில் ஆடியோவாக பதிவு  செய்யப்பட்டு இருந்தது. தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட சில காரணங்களுக்காக பதிவிடுதல் தள்ளிப்போடப்பட்டு வந்தது. ஒருவழியாக ஆடியோ தொகுப்பை 'அஞ்சாசிங்கம்' செல்வினிடமிருந்து வாங்கி பேட்டியை பதிவேற்ற வேண்டிய தருணம் வாய்த்து விட்டது.    இதற்கு முன் நான் ஒரு கட்சியின் தலைமை அலுவலகத்தினுள் பிரவேசித்ததுமில்லை. முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரை சந்தித்து உரையாடியதும் இல்லை. எனவே ராஜாராமின் அழைப்பை ஏற்று எழும்பூரில் உள்ள ம.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான தாயகத்தை அடைந்தேன். பேட்டியினூடே எம்முடன் இணைந்தனர் அஞ்சாசிங்கமும், நண்பர் சதீசும்.   

அலுவலகத்தின் மாடியில் எம்மை வரவேற்றார் சம்பத் அவர்கள். அடுத்த சில நிமிடங்களில் பேட்டி தொடங்கியது. சில கேள்விகள் மட்டுமே 2011 சட்டசபை தேர்தலுக்கு தொடர்புடையவை. பெரும்பாலானவை ம.தி.மு.க. கட்சியின் செயல்பாடு, எதிர்கால திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியவை என்பதால் நிகழ்காலத்திற்கும் பொருந்தும் வண்ணமாக இப்பேட்டி அமையும் என நம்புகிறோம். குறிப்பாக சங்கரன் கோவிலில் அனல் பறக்கும் நேரத்தில் சூடான இந்த 'அரசியல் டீ' சுவாரஸ்யத்தை தருமென நம்புகிறோம். ராஜாராமன் கேட்ட கேள்விகளில் கட்சிசாராத நண்பர்கள் நாஞ்சில் சம்பத்திடம் கேட்கச்சொன்ன கேள்விகளும் அடக்கம்.  இனி பேட்டி:  

ராஜாராமன்: 1996 இல் வைகோ 'நாங்கள் ஆட்சிக்கு வருவோம்' என்றார். ஆனால் இன்றுவரை அது நடக்கவில்லை. இன்றைக்கு கட்சி ஒரு முட்டுச்சந்தில் இருப்பது போன்ற ஒரு சூழல் நிலவுகிறதே. இது ஏன்?

நாஞ்சில் சம்பத்: நாங்கள் இப்படி ஒரு நிலையில் இருக்கிறோம் என்பது சிலர் கட்டவிழ்த்து விடும் பொய்ப்பிரச்சாரம். ம.தி.மு.க.இப்போதுதான் சிட்டுக்குருவியாக விடுதலையாகி பறக்கிறது(அ.தி.மு.க.  கூட்டணி முறிவு). இனி தன்னிச்சையாக இயங்குவோம். எங்கள் கொள்கையை அழுத்தமாக மக்களிடம் பதிவு செய்வோம். யாரிடமும் சமரசம் செய்து கொள்ளாமல் எங்கள் பயணத்தை முன்னெடுத்து செல்ல தருணம் வந்துள்ளது.  இக்கட்டான கால கட்டத்தை நாங்கள் கடந்து விட்டோம். முட்டுச்சந்தில் இல்லை. முன்னேற்றத்தின் முதல் படியில் காலெடுத்து வைத்துள்ளோம். 96 இல் எங்கள்  கட்சி '2006 இல் ஆட்சியை பிடிப்போம்' என்று சொன்னது உண்மைதான். ஆனால் அதற்கு சாதகமான சூழல் நிலவவில்லை.  அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டு இருப்பின் நாங்கள் வென்றிருப்போம்.  ஆனால் இந்த மண்ணில் விலை போகிற கூட்டணி தர்மம் நிலவுகிறது. கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுத்து செல்கையில் இதையெல்லாம் சந்திக்க வேண்டி இருக்கிறது. மறுமலர்ச்சி என்பது எளிதில் வந்துவிடாது. அதற்கு நிறைய விலை கொடுக்க வேண்டும். உயிரிழப்புகள் இருக்கும். அடக்கு முறைகள் இருக்கும். துயரங்கள்  இருக்கும். அனைத்தையும் தாண்டி நாங்கள் எங்கள் பயணத்தை தொடருவோம். கண்ணீரோடு விதைத்து இருக்கிறோம். கம்பீரத்துடன் அறுவடை செய்யும் காலம் வரும்.

ராஜா: 93 இல் கட்சி துவங்கப்பட்டது. அப்போது இருபதுகளில் இருந்த இளைஞர்கள் இப்போது நடுத்தர வயதை எட்டி இருப்பர். முன்பு இருந்த வேகம் அவர்களிடம் இருக்குமா? அவர்களை தக்க வைப்பதும், புதிதாக இளைஞர்களை ஈர்ப்பதும் சாத்தியமா?


சம்பத்: ம.தி.மு.க.வை தொடங்கும்போது என் வயது 33. இப்போது 50. ஆனால் முன்பை விட எனக்கு ஊக்கம் அதிகமாகி உள்ளது. அதுபோல்தான் எங்கள் தலைவர் வைகோவும். எங்கள் கோலங்கள் மாறலாம். கொள்கைகளில் சமரசமில்லை. அடுத்த தலைமுறையின் கையில் கட்சி ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 40 வயதான பொறியியல் பட்டதாரி ஈஸ்வரன்(கோவை மாவட்ட செயலாளர்) கட்சிக்காக 50 லட்ச ரூபாய் நிதி திரட்டி தந்துள்ளார். இதுவரை எவரும் கட்சிக்காக இவ்வளவு நிதி திரட்டியதில்லை. கொஞ்சனூர் ராமசாமி என்றொருவர் கட்சியில் இருந்தார். திடீரென தி.மு.க.வில் சேர்ந்தார். அவரால் கூட 13 லட்சம்தான் எமது கட்சிக்காக திரட்ட முடிந்தது. என்னை விட வயது குறைந்த பரணி மணி 41 லட்சம் திரட்டினார். இப்படி பலருண்டு. லட்சிய தாகம் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களின் நந்தவனமாக ம.தி.மு.க. மட்டுமே உள்ளது.


ராஜாராமன்: புதிய வாக்காளர்களை ஈர்க்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

சம்பத்: மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் தோறும் வாயில் கூட்டங்கள் நடத்தி அந்த நாற்றுக்களை(கல்லூரி மாணவர்கள்) எங்கள் பாத்தியில் நாடும் முயற்சிகளை மேற்கொள்வோம்.

ராஜாராமன்: வைகோ மீதான நன்மதிப்பு நகரம் சார்ந்த மக்கள் மத்தியில் சற்று அதிகமாகி வருகிறது எனத்தெரிகிறது. இதை தக்கவைக்க நடுநிலையான , கிராம வாக்காளர்களை ஈர்க்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

சம்பத்: இவர்களை ஈர்க்கும் வல்லமை உள்ள ஒரே தலைவர் வைகோதான். அவருடைய அமானுஷ்ய ஆற்றல், அபாரமான நினைவாற்றல், களமாடும் போர்க்குணம், எந்த சவாலையும் எதிர் கொள்ளும் துணிச்சல், விவாதம் செய்யும் வல்லாண்மை, உலக அரங்கில் உரிமை இழந்த தமிழர்க்கு அங்கீகாரம் பெற்றுத்தர சிந்திக்கும் நல்லெண்ணம் இவையெல்லாம் நடுநிலையாளர்களிடம் ஏற்கனவே விதைக்கப்பட்டு விட்டது. அறுவடை செய்கிற காலம் வரும். கல் அழுதது, சிற்பம் பிறந்தது.  ஷாஜஹான் அழுதான் , தாஜ்மகால் பிறந்தது. வைகோ அழுதார், ம.தி.மு.க. பிறந்தது. கண்ணீரோடு தொடங்கிய பயணம் வெற்றிகளை சந்திக்கும் என்கிற கனத்த நம்பிக்கையில் உள்ளோம்.

ராஜாராமன்: ம.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பு செய்தது போல் இதற்கு முன்பு இதுபோன்ற சரியான முன்னுதாரணங்கள் இருந்துள்ளனவா?

சம்பத்: இருக்கிறது. 1967 - 1977 வரை மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்டுகள் தேர்தலில் போட்டியிடவில்லை. அந்த இடைப்பட்ட நேரத்தில் கடும் களப்பணி மற்றும் கட்சிப்பணியை ஆற்றினர். அதன் விளைவாக 1977 முதல் பல ஆண்டுகள் அக்கட்சி கொடிகட்டிப்பறந்தது.

                                                                 
ராஜாராமன்: தமிழகத்தின் மூலை, முடுக்குகளில் எல்லாம் பயணம் செய்து மக்களை சந்தித்த தலைவர் என்று சொன்னால் இன்றைய அரசியலில் வைகோவை தவிர எவருமில்லை. ஆனால் ஈழம் சார்ந்த பிரச்னைகளை மட்டுமே மையப்படுத்தி பெரும்பாலும் பேசிவரும் வைகோ, தமிழக மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு என்ன குரல் தந்துள்ளார் என கேள்விகள் எழுகின்றனவே?


சம்பத்: தமிழகத்திற்கு வைகோ எதுவும் பேசவில்லை என்பது ஊடகங்கள் வன்மம் கொண்டு எழுப்பும் குற்றச்சாட்டு. முல்லைப்பெரியார் பிரச்னையில் கேரளம் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியபோது 10,000 பேரை திரட்டி கேரளா எல்லையில் மறியல்  போராட்டம் செய்தவர் வைகோ. அதற்காக மதுரையில் இருந்து கூடலூர் வரை நடந்து சென்றவர் வைகோ. தூத்துக்குடியில் 10 லட்சம் மக்களின் உயிரை காவு கேட்கின்ற ஸ்டெர்லைட் என்கிற நச்சு ஆலையை மூடக்கோரி வைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடி வரை நடந்து வந்தவர் வைகோ. இதை சட்டரீதியாக எதிர்கொள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் எங்கள் தலைவர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுக்க அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் போராடி அதை பொதுத்துறை நிறுவனம் ஆக்கியவர் வைகோ. காவேரி பிரச்னைக்கு தொடர்ந்து குரல் தந்தவர். திருநெல்வேலி முதல் சென்னை வரை 1,400 கி.மீ. நடந்து வருகையில் மக்களிடம் "நிலங்களை விற்காதீர்.  நதி இணைப்புக்கு குரல் குடுங்கள்" என்றவர் அவர். ஏடுகளும்,ஊடகங்களும் எங்களை ஒதுக்கி வைத்துள்ள சூழலையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். ஈழத்திற்கு மட்டுமே நாங்கள் குரல் தருகிறோம் என்று சொல்வது ஏற்புடையதல்ல.


ராஜாராமன்: ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் கம்யூனிஸ்டுகளும் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தில் இருந்து உங்கள் போராட்டம் எவ்வாறு வேறுபடுகிறது, எவ்வகையில் வலிமை வாய்ந்ததாக உள்ளது?


சம்பத்: இப்போராட்டத்தில் பலர் பின்வாங்கி விட்டனர். இப்போது வைகோ மட்டுமே களத்தில் உள்ளார். வைகோவை தவிர அனைவரையும் அந்நிறுவனம் விலைக்கு வாங்கி விட்டது. அதன் நிர்வாகி அகர்வால் வைகோவை சந்திக்க பலமுறை முயன்றும் தலைவர் தவிர்த்து விட்டார். வைகோ பயணம் செய்யப்போகும்  விமானம் எது என்பதை அறிந்து அதே விமானத்தில் அவரும் பயணித்து வைகோவை சந்திக்க முயன்றார். கொடுங்கோலன் முசோலினியை சந்திக்க மறுத்த நேருவைப்போல, தூத்துக்குடி மக்களின் உயிர் மற்றும் உடமைகளை காவு கேட்கின்ற அகர்வாலை வைகோ சந்திக்க மறுத்தார். ஆகவே, இந்த பிரச்னையில் நாங்கள்தான் களத்தில் உள்ளோம். மற்றவர்கள் பின்வாங்கி விட்டனர் என்பது கசப்பானது எனினும் அதுதான் உண்மை.


தொடரும்....
.................................

குறிப்பு: சில மாதங்களுக்கு முன்பு madrasbhavan.com தளத்தில் வெளியான பேட்டி இங்கு மீண்டும் வெளியிடப்பட்டு உள்ளது.

நன்றி
!சிவகுமார்! 





Wednesday 26 September 2012

ஜெயலலிதா-சசிகலா நட்பு : ஒரு பார்வை

 டிஸ்கி : சகோதரி ஆமினா அவர்கள் ஜெ-சசி நட்பைப் பற்றி விளக்கி ஒரு பதிவிடுமாறு கேட்டிருந்தார்கள். அதற்கு பதிலாக நாம் எழுதியிருப்பதே இந்தப் பதிவு.

அரசியல் என்பது சமூக சேவை என்பதையும் தாண்டி, நல்ல ஒரு பிஸினஸாக ஆகிவிட்ட காலகட்டம் இது. எல்லாத் தொழிலையும் போலவே அரசியலிலும் பெரும் முதலீடு தேவைப்படுகிறது. அதை வெற்றிகரமாக நடத்த, சில நம்பகமான ஆட்களும் தேவைப்படுகிறார்கள்.

ஒரு பிஸினஸ்மேன் பொதுவாக குடும்ப உறுப்பினர்களை வைத்தே, தொழிலை வெற்றிகரமாக விரிவுபடுத்திவிட முடியும். உடன்பிறந்தோர், மச்சினர்கள், பிள்ளைகள் என ஒரு பிஸினஸ்மேனுக்கு தோள் கொடுக்க நல்ல உறவுக்கூட்டம் அவசியம் ஆகிறது.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒரு ஓட்டுக்கு 300 முதல் 2000 வரை காசு வாங்கிவிட்டே போடும் மனநிலைக்கு நம் மக்கள் வந்துவிட்டார்கள். அரசியல்வாதிகள் தான் மக்களை அப்படிக் கெடுத்துவிட்டார்கள் என்று நாம் பொதுவாகச் சொன்னாலும், மக்களின் மீதும் பெரும் தவறு இருக்கிறது. ஒரு கட்சி, ஒரு தொகுதிக்கு குறைந்த பட்சம் 2 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டிய நிலை. (வேட்பாளர் செலவழிக்கும் கோடிகள் தனி!). அதைத் தவிர, கூட்டணியில் அங்கம் வகிக்கும் உதிரிக்கட்சிகளின் தேர்தல் செலவில் பெரும்பகுதியை பெரிய கட்சிகளே ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே ஒரு தேர்தலை சந்திக்க வேண்டுமென்றால், ஒரு பெரிய கட்சி குறைந்த பட்சம் ரூபாய்.1500 கோடியை கையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம். இந்த பணத்தில் பகுதி ஊழல் மூலமாகவும், பகுதி தொழிலதிபர்கள் தரும் நிதி மூலமாகவும் திரட்டப்படுகிறது. தேர்தலைத் தவிர மாநாடு-பொதுக்கூட்டம்-முன்னால்/பின்னால் வரும் கார்களின் டீசல் செலவு இத்யாதிகள் என, பல்லாயிரம் கோடி முதலீடுகள் தேவைப்படும் / பல்லாயிரம் கோடிகளை கையில் வைத்திருக்க வேண்டிய பிஸினஸே இன்றைய அரசியல்.

அரசியல் பற்றிய இத்தகைய புரிதலோடு தான் நாம் ஜெயலலிதா-சசிகலா நட்பை ஆராய வேண்டும். எம்.ஜி.ஆர் வயோதிகத்தால் பலவீனமடைந்திருந்த காலகட்டத்தில், அதிமுகவில் நெடுஞ்செழியன் - கே.கே.எஸ்.எஸ்.ஆர்-வீரப்பன் - சோமசுந்தரம்-திருநாவுக்கரசு என பல (அப்போதைய) ஜாம்பவான்கள் பிரபலமான புள்ளிகளாக இருந்து வந்தார்கள். அப்போது ஆண்களின் உலகமாக இருந்த  தமிழக அரசியலில், இத்தனை ஆண்களையும் மீறி ஒரு பெண் மேலெழுந்து வருவது சாதாரண விஷயமே அல்ல. அதற்குரிய போராட்ட குணம் ஜெயலலிதாவிடம் இருந்தாலும், ஒரு அரசியல் சாம்ராஜ்யத்தை (மேலே விளக்கியபடி) கட்டமைக்க, நம்பிக்கையான ஆள் பலம் தேவைப்பட்டது.

திருநாவுக்கரசு உள்ளிட்டோர் அப்போது ஜெயலலிதாவை முன்னிறுத்தினாலும், எப்போது வேண்டுமானாலும் ஜெயலலிதாவுக்கு எதிராக அவர்கள் திரும்பும் வாய்ப்பு இருந்தது. அது பின்னால் நடக்கவும் செய்தது. அத்தகைய சூழ்நிலையில், ஜெயலலிதாவிற்கு நல்ல தோழியாக அறிமுகம் ஆனார் சசிகலா. (அது பற்றிய மேலதிக விவரத்திற்கு: கஸாலி எழுதிய ஜெயலலிதா வாழ்க்கை வரலாறைப் படிக்கவும்).


அரசியல் எனும் தொழிலுக்கான நிதியை சேர்ப்பது, அதை நிர்வகிப்பது, தேர்தல் நேரத்தில் சரியானபடி மாநிலம் முழுக்க பகிர்ந்தளிப்பது, கட்சியில் தனக்கு இணையான செல்வாக்கு உள்ள ஜாம்பவான்களை செல்லாக்காசாக்குவது, பிறகு ஒழித்துக்கட்டுவது என இன்றைய அரசியலுக்கான தகிடுதத்த வேலைகள் எல்லாக் கட்சிகளிலும் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. சில தலைவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன், பல மனைவி-துணைவி-குடும்பங்களை உருவாக்கி, இதைச் சமாளித்த சூழ்நிலையில், ஜெயலலிதாவிற்கு அப்படி அமைந்த நட்புக்கூட்டம் தான் சசிகலா குரூப்.

கட்சி விஷயங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சிச் சேனல்களை நிர்வகிப்பது, மிடாஸ் போன்ற தொழில்களை பினாமி பெயரில் நடத்திக்கொண்டுப்பது, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது என பல விஷயங்களிலும் சசிகலாவின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. சமூக நோக்கில், நியாய தர்ம அடிப்படையில் சசிகலா நட்பு, தவறானது தான். ஆனால் ஜெயலலிதாவின் பார்வையில், சசிகலா செய்திருப்பது சாதாரண விஷயமல்ல.

ஜெயலலிதா முதன்முதலாக ஆட்சிக்கு வந்ததும், அடுத்து பல தேர்தல்களை சந்திக்கத் தேவையான நிதியை கண்மூடித்தனாக ஊழல் செய்து, சேர்த்துக் குவித்தார். பெரும்பாலான நிதி, சசிகலா குரூப்பாலேயே நிர்வகிக்கப்பட்டதை, பல சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைகள் மூலம் வெளிவந்தது. ஆனால் ஒரு அரசியல்வாதிக்கு பதவிக்கு அடுத்தபடியாக, அதிகாரத்தைத் தருவது பணம் தான். இதை ஜெயலலிதா-சசிகலா நன்றாகவே அறிந்திருந்தார்கள்.

 மற்ற அரசியல்வாதிகள் பொறுமையாக இருபது வருடங்களாக செய்த காரியத்தை, ஐந்தே வருடங்களில் செய்து முடித்தார்கள்.

அதனால் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டதும், அதனால் அவர் ஆட்சியை இழந்ததும் நாம் அறிந்ததே. அடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் எடுத்த நடவடிக்கைகளால், ஜெயலலிதாவின் இமேஜ் டோட்டலாக டேமேஜ் ஆனது. அந்த நேரத்தில், அதை எதிர்கொள்ள ஜெயலலிதாவும், அவருக்கு ஆதரவான
 ஊடகங்களும் ஒரு கதையை கட்டவிழ்த்தன. அந்த கதையின் சுருக்கம் ‘ஜெயலலிதாவிற்கு ஒன்றுமே தெரியாது. எல்லாமே சசிகலா குரூப் செய்த தவறுகள் தான்’. அந்த கதை மக்களிடம் நன்றாகவே எடுபட்டது. அடுத்து வந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற அது உதவியது. அதன்பின், எப்போதெல்லாம் ஜெயலலிதா மேல் குற்றச்சாட்டுகள் குவிகின்றனவோ, அப்போதெல்லாம் இதே கதை ஊடகங்களால் பரப்பப்படும். (படிக்க:
சசிகலா என்ற மம்மியும் ஜெ. என்ற டம்மியும்)

பொதுவாகவே இத்தைகைய சூழ்நிலையில், அதுவும் நன்றாகச் சம்பாதித்தபின், இப்படி பழி சொல்லும் நபருடன் உறவைத் தொடர வேண்டிய அவசியம் யாருக்கும் இருக்காது. ஆனால் சசிகலா அந்த நேரத்தில் காட்டும் அமைதியும், எத்தகைய சூழ்நிலையிலும் கோர்ட்டால் அலைக்கழிக்கப்பட்டாலும் ஜெயலலிதவிற்கு எதிராக ஒரு வார்த்தையையும் உதிர்க்காத தன்மையுமே அவர்களது நட்பின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.

சந்தோசத்தைப் பகிரும் சொந்தங்கள்கூட கஷ்டத்தில் நம்மை விட்டு விலகி ஓடிவிடுகின்றன. ஆனால் சசிகலா தனது கணவர் உள்ளிட்ட பலரின் அறிவுரையையும் பொருட்படுத்தாமல், ஜெயலலிதாவின் கஷ்டகாலத்தில் விட்டு ஓடாமல் கூடவே நின்றார். தற்போதைய அரசியல் வரலாற்றில், இந்த அளவிற்கு நட்புக்கு எடுத்துக்காட்டாக, வேறு யாரையும் சொல்ல முடியுமா என்பது சந்தேகமே. அவர்களது நட்பு, இந்த சமூகத்திற்கு செய்திருப்பது நன்மையா-தீமையா என்ற ஆராய்ச்சியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயமே.


டிஸ்கி : நண்பர்கள் யாரும் தயவு செய்து இந்தப் பதிவை தமிழ்மணத்தில் இணைக்கவோ, ஓட்டுப்போடவோ வேண்டாம். நன்றி - செங்கோவி

 ----------------------------------------------------------------------------------------------------------------------------
இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


Monday 24 September 2012

ஜெயலலிதாவிற்கு உதவிய (சசிகலா) நடராஜன்



அது 1989-ஆம் ஆண்டு, அண்ணா.தி.மு.க., ஜானகி அணி- ஜெயலலிதா அணி என்று இரு பிரிவுகளாக பிளவுபட்டு தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில்தான் ஜெயலலிதா முதன்முதலாக (போடி தொகுதியில்) போட்டியிட்டு வென்றார்.

அதன்பின் சில நெருக்கடிகளால் அரசியலிலிருந்தும், எம்.எல்.ஏ.,பதவியிலிருந்தும் விலக முடிவு செய்த ஜெயா அதை ஒரு ஒரு கடிதமாக எழுதினார்.  அந்தக்கடிதத்தை சபாநாயகருக்கும் அனுப்ப முடிவு செய்தார். ஜெயலலிதாவின் இந்த முடிவை அறிந்த சசிகலாவின் கணவர் நடராஜன் அவசரப்படவேண்டாம் என்று ஜெயலலிதாவை சமாதானப்படுத்தி அந்தக்கடிதத்தை தன் வீட்டில் பத்திரப்படுத்தினார்.

அதன்பின் சில நாட்களில் நடராஜன் வீட்டில் நடந்த சோதனையில் அந்தக்கடிதம் போலீசார் கைகளில் சிக்கியது. அடுத்த நாள் வெளிவந்த நாளிதழ்களில் ஜெயலலிதா ராஜினாமா பற்றிய செய்தி வெளிவந்தது. இதையறிந்த ஜெயலலிதா வழ்க்கம்போல் இது கருணாநிதியின் சதி என்று கண்டனம் தெரிவித்தார்.

அதற்கு அடுத்த நாள் கூடிய சட்டமன்றத்திலும் இது எதிரொலித்தது. தொடர்ச்சியாக கலைஞர் பட்ஜெட் உரையை படித்தபோது, அண்ணா.தி.மு.க., உறுப்பினர்களால் அந்தபட்ஜெட் உரை பறிக்கப்பட்டு கிழிக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றது.

அன்று மட்டும் ஜெயாவின் ராஜினாமாவை நடராஜன் தடுக்காமல் விட்டுருந்தால், இப்போது ஜெயலலிதா அரசியலிலிருந்தே ஒதுங்கியிருப்பார். ஒருவேளை தன் சக நடிகைகளான வெண்ணிற ஆடை நிர்மலா, லதாவைப்போல் ஏதேனும் சினிமா அல்லது சீரியல்களில் அம்மா, அத்தை, வில்லி வேடங்களில் நடித்துக்கொண்டிருப்பார்.
அந்த வகையில், இன்று அரசியல்வானில் ஜெ., ஜொலிப்பதற்கு நடராஜனும் ஒரு காரணம். 



இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


Saturday 22 September 2012

தி.மு.க.,விலிருந்து சிவாஜி விலகியதன் பின்னணி


எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் சேர்ந்து வளர்ந்த வரலாறு என்ற பதிவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், திருப்பதி போய்வந்த சர்ச்சையால் தி.மு.க.,வை விட்டு விலகினார் என்று குறிப்பிட்டிருந்தேன். அது எம்.ஜி.ஆரை பற்றிய பதிவென்பதால் சிவாஜியை பற்றி மேலோட்டமாகவே குறிப்பிட்டிருந்தேன். அதை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் என்று ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. அந்த பின்னூட்டத்திற்கான பதில்தான் இது....

1957-ஆம் ஆண்டு, பெரும் புயலில் சிக்கியது. தி.மு.க.,சார்பில் புயல் நிவாரண நிதி திரட்டுமாறு அறிஞர் அண்ணா அவர்கள் கோரிக்கை விடுத்தார். அண்ணாவின் கோரிக்கையை ஏற்று நிதி திரட்டும் பணியில் நடிகர்கள் ஈடுபட்டனர். அதில் சிவாஜியும் ஒருவர். நிறைய நிதி வசூலானது.

அதிக நிதி வசூலித்தவர்களுக்கு பாராட்டுவிழாவும் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்ள சிவாஜிக்கு அழைப்பில்லை. அதே நேரம், அந்த விழாவில் கலந்து கொள்வதற்கு எம்.ஜி.ஆர்., அழைக்கப்பட்டிருந்தார். அதிக நிதி வசூலித்து தந்ததாக எம்.ஜி.ஆரை அண்ணாவும் மற்றவர்களும் பாராட்டினார்கள்.

என்னை ஒதுக்கவேண்டும் என்பதற்காகவே எம்.ஜி.ஆரை பாராட்டியிருக்கிறார்கள், என்னை வேண்டுமென்றே புறக்கணித்திருக்கிறார்கள் என்று அதிருப்தி தெரிவித்தார் சிவாஜி.
கடவுள் மறுப்பில் தீவிரமாக இருந்த சிவாஜியை, அவருக்கு தி.மு.க.மீதிருந்த அதிருப்தியை பயன்படுத்தி அந்த நேரத்தில் அவரை திருப்பதி அழைத்து சென்று சிறப்பு தரிசனம் செய்யவைத்தார் இயக்குனர் பீம்சிங்.

 நாத்திகரான சிவாஜி திருப்பதிக்கு சென்றதை அறிந்த பத்திரிகையினர்  நாத்திகரான சிவாஜி ஆத்திகராக மாறினார் என்று செய்தி வெளியிட்டனர். திருப்பதியிலிருந்து சென்னை திரும்பும் வழிகளில் சுவரெங்கும் திருப்பதி கணேசா கோவிந்தா..கோவிந்தா என்று எழுதியிருந்தனர். இதை கவனித்த சிவாஜி மனம் வேதனை அடைந்தார். மேலும், சிவாஜியின் போஸ்டர்களில் சாணி அடித்த செய்தியும் அவரின் கவனத்திற்கு வந்தது. கடுப்பாகிவிட்டார்.


இனிமேலும், பொறுமையாக இருப்பதில் அர்த்தமில்லை என்று முடிவுசெய்து உடனே காமராஜரை சந்தித்து தன்னை காங்கிரசில் இணைத்துக்கொண்டார். தி.மு.க.வினர்தான் என்னை தூக்கிக்கொண்டு போய் காங்கிரசில் போட்டனர் என்று பேட்டியும் அளித்தார்.

=============================================

இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


Friday 21 September 2012

பொற்கால ஆட்சி காமராஜர் ஆட்சியா? அண்ணா ஆட்சியா?



சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது... எல்லோரும் காமராஜர் ஆட்சியமைப்போம் என்றுதான் சொல்கிறார்கள். ஏன் யாரும் அண்ணா ஆட்சியமைப்போம் என்று சொல்வதில்லை? காமராஜர்தான் பொற்கால ஆட்சியை கொடுத்தாரா? அண்ணா தரவில்லையா? என்று கேட்டார்.


தமிழ்நாட்டில் காமராஜர் முதல் அமைச்சராக இருந்தது 1954-லிருந்து 1963 வரை 9 ஆண்டுகள். அண்ணாவோ 1967-லிருந்து 1969 வரை இரண்டு ஆண்டுகள் தான். ஆகவே, தமிழ்நாட்டை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது அண்ணாவை விட காமராஜரே..... அப்படி அதிக நாட்கள் ஆட்சியிலிருந்ததால் அவருக்கு நல்லது செய்யவும் வாய்ப்புகள் அதிகம் இருந்தது. ஆனால், அண்ணாவோ மிக குறுகிய காலமே ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். அப்படியிருக்கும்போது அண்ணா சிறந்த ஆட்சியை கொடுத்தாரா? காமராஜர் சிறந்த ஆட்சியை கொடுத்தாரா என்ற கேள்வி எழவே கூடாது. ஒரு வேளை காமராஜரை விட, அண்ணா அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்திருந்தால் நிறைய செய்திருப்பாரோ என்னவோ? என்ன  நான் சொன்ன  பதில் சரிதானே.

காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி என்பதற்கான சில காரணங்கள்.

காமராஜர் தண்ணீருக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். அதனால்தான்.....
பரம்பிக்குளம்-ஆழியாறு அணை
கீழ்பவானி நீர்த்தேக்கம்
சாத்தனூர் நீர்த்தேர்க்கம்
மணிமுத்தாறு திட்டம்
வைகை அணைக்கட்டு திட்டம்

போன்றவைகள் காமராஜர் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலும்,
திருச்சி பாய்லர் தொழிற்சாலை,
ஆவடி ராணுவ டாங்கி தொழிற்சாலை,
நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன்
பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை
நீலகிரி ஃபிலிம் தொழிற்சாலை
கிண்டி ஹிந்துஸ்தான் டெலிபிரிண்ட் தொழிற்சாலை
அம்பத்தூர், ராணிப்பேட்டை தொழிற்பேட்டை

முதலியவை காமராஜர் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டவைகள் தான்.




இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


Wednesday 19 September 2012

ஜெயலலிதாவின் அரசியல் வரலாறு (சில முக்கிய தகவல்களுடன்)


எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியை விட ஜெயலலிதாவை மக்கள் எம்.ஜி.ஆரின் வாரிசாக ஏற்றுக்கொண்டது ஏன்? என்ற கேள்வியை கொடுத்து அத்ற்கான பதிலை ஒரு பதிவாக வெளியிடுங்களேன் என்று நண்பர் செங்கோவி கேட்டிருந்தார். இந்த கேள்வி செங்கோவி மனதில் மட்டுமல்ல.... எல்லோர் மனதிலும் இருக்கும். அதற்கான விடைதேடும் முயற்சியே இந்த பதிவு.

எம்.ஜி.ஆரின் வாரிசாக ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டது பற்றி ஒரு வரியில் சொல்ல முடியாது. நீண்ட விளக்கம் கொடுத்தால் தான் விளங்கும்.

எம்.ஜி.ஆரை திருமணம் செய்துகொண்ட ஜானகி அம்மையார் சினிமாவிலிருந்து விலகி, எந்த ஒரு அரசியல் ஆர்வமும் இல்லாமல், நல்ல குடும்பத்தலைவியாக மட்டுமே விளங்கினார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு சிறிது காலம் முதல்வராக இருந்ததை தவிர....

ஆனால், ஜெயலலிதாவின் வளர்ச்சி அப்படிப்பட்டதல்ல....

1981-ஆம் ஆண்டு மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடத்த தீர்மானித்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அதை சிறப்பாக நடத்தி முடிக்கும் பொறுப்பை செய்தி விளம்பரத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனிடம் ஒப்படைத்தார். அந்த மாநாட்டில் காவிரி தந்த கலைசெல்வி என்னும் நாட்டிய நாடகம் நடைபெறுவதாக இருந்தது. அந்த நாடகத்தில் நடிப்பதற்காக  சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவை அழைத்துவந்தார் ஆர்.எம்.வீரப்பன். அந்த வகையில் ஜெயாவின் அரசியல் பிரவேஷத்திற்கு வித்திட்டவர் ஆர்.எம்.வி.,தான்...பின்னாளில் அது தனக்கே பெரும் ஆப்பாக முடியும் என்று தெரியாமலே....

அதன்பிறகு சுமார் ஒன்றரை வருடம் கழித்து அதாவது 1982 ஜூனில் அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் ஜெயலலிதா. பிறகு ஜூலையில் தான் கொண்டுவந்த சத்துணவு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு கவர்ச்சியான முகம் தேவைப்பட்டது எம்.ஜி.ஆருக்கு. அப்போது அவரின் நினைவிற்கு வந்தவர் ஜெயலலிதா. மேடைக்கு மேடை சத்துணவு திட்டத்தையே பேசி அத்திட்டத்திற்கு புகழ் சேர்த்ததோடு மட்டுமல்லாமல்  அந்த திட்டத்திற்கு நன்கொடையாக ரூபாய் 40,000 வழங்கினார்.

சத்திணவு திட்டத்தின் மீது ஜெ.,க்கு இருந்த அக்கறையை பார்த்த எம்.ஜி.ஆர். அவரை சத்துணவு திட்ட உயர்மட்டக்குழுவிலும் இடம் கொடுத்தார். தொடர்ந்து இவரை கவனித்து வந்த எம்.ஜி.ஆர்., 1983-இல் கழக கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார். கொ.ப.செ., யான ஜெயலலிதா இன்னும் தீவிரமாக தமிழகத்தை சுற்றிவந்தார். அப்படி சுற்றிய ஜெயலலிதாவிற்கு செல்லும் இடமெல்லாம் அபார வரவேற்ப்பு கொடுத்து அசத்தினர் தொண்டர்களும், லோக்கல் நிர்வாகிகளும். எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியான மரியாதையை தொண்டர்கள் ஜெ.,க்கு வழங்கினர்.

அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலமும், பிரச்சாரங்கள் மூலமும் மக்களை வசீகரிக்க ஆரம்பித்தார் ஜெ. எம்.ஜி.ஆரின் உத்தரவிற்கிணங்க ஜெயலலிதாவிற்க்கு அந்த பேச்சுக்களை எழுதித்தந்தவர் வலம்புரி ஜான். ஜெ.,விடம் இருந்த பேச்சுத்திறமையையும், அபாரமான ஆங்கில, ஹிந்தி புலமையையும் கவனித்த எம்.ஜி.ஆர். இவர்தான் டெல்லி அரசியலுக்கு சரியான ஆள் என்று தீர்மானித்து ராஜ்யசாபா உறுப்பினராக்கினார். மேலும், ராஜ்யசபா அ.தி.மு.க., துணைத் தலைவராகவும் நியமித்தார். அங்கு இவர் பேசிய பேச்சுக்கள் பிரதமர் இந்திராவிடமும் பாராட்டை பெற்றது.

ஏற்கனவே ஜெயலலிதாவின் வளர்ச்சியால் பொறுமிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் மேலும் பொறுமலை கிளப்பியது. கட்சியில் எத்தனையோ சீனியர்கள் இருக்கும்போது ஜெ.,க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர். என்ற புகைச்சலும் கிளம்பியது. நேரடியாகவே எம்.ஜி.ஆரை குற்றம் சாட்டினார் வருவாய்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம். அதனால் கோபமுற்ற எம்.ஜி.ஆர்., எஸ்.டி.எஸ்.,வசமிருந்த முக்கியத்துறைகளை பறித்துக்கொண்டு உணவுத்துறையை கொடுத்து டம்மியாக்கினார். அவரின் ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டது.

இதற்கெல்லாம் காரணம் ஜெ.,தான் என்று நினைத்து கடுப்பான எஸ்.டி.எஸ்., கட்சியையும், ஆட்சியையும் குறை சொன்னார். இதனால் மேலும் கோபமான எம்.ஜி.ஆர்., எஸ்.டி.சோமசுந்தரத்தை அமைச்சரவையிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கினார்( ஜெயலலிதாவிற்கு  முக்கியத்துவம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர்., என்று குற்றம் சாட்டியதால் கட்சியிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும் நீக்கப்பட்ட  எஸ்.டி.எஸ்., பின்னாளில் அதே ஜெயலலிதாவின் அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இடம் பிடித்தது வரலாறு).

இந்த சம்பவத்திற்கு பிறகு ஜெ.,யை பற்றி எம்.ஜி.ஆரிடம் புகார் செய்ய பயந்தார்கள் மற்றவர்கள். ஆனாலும், அவரின் அசுர வளர்ச்சி மற்றவர்களின் கண்ணை உறுத்தவே செய்தது. ஜெ.,யை ஓரங்கட்ட நாள் பார்த்துக்கொண்டு இருந்தனர்.அந்த நாளும் வந்தது. ஆம்...எம்.ஜி.ஆரின் உடல் நலம் குன்றியது. சிறுநீரகக்கோளாறு, பக்கவாதம் என்று அடுத்தடுத்து  நோய் தாக்கியது. இப்படி எம்.ஜி.ஆரின் உடல் நிலை சிக்கலான சமயத்தில் அவரை பார்ப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஜானகி, நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், பண்ரூட்டி, ஹண்டே போன்ற மிகச்சிலரே அவரின் பக்கத்தில் அனுமதிக்கப்பட்டனர். மறந்தும் கூட ஜெயலலிதாவை அனுமதிக்கவில்லை. இது மூத்த அமைச்சர்களின் சதி என்று கண்டனம் தெரிவித்தார் ஜெ.
மேல் சிகிட்சைக்காக அமெரிக்கா அழைத்துசெல்லப்பட்டார் எம்.ஜி.ஆர்.,

அந்த நேரத்தில் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் ராஜீவ்காந்தி. அப்போதே சட்டசபையயும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த முடிவு செய்தனர் ஆர்.எம்.வீயும், நெடுஞ்செழியனும். அதற்கான அனுமதியையும் எம்.ஜி.ஆரிடம் பெற்றனர்.

அதன்பின் ஜெயலலிதாவை ஓரங்கட்டினர். அவருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. இப்படியே இருந்தால் மீண்டும் சினிமாவில் நடிக்க அனுப்பிவிடுவார்கள் என்று ஜெயலலிதா நினைத்தாரோ என்னவோ உடனே சுதாரித்துக்கொண்டார் .அழையா விருந்தாளியாக, தனியாளாக பிரச்சாரத்திற்கு புறப்பட்டார்.  இதைத்தான் அதிமுக தொண்டர்களும் எதிர்பார்த்தனர். அவர்களையும் உற்சாகம் தொற்றிக்கொண்டது… . நாடாளுமன்றத்துடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் நோயுடன் போராடிக்கிக்கொண்டு அமெரிக்காவில் இருக்கிறார்.  ஆகவே , பிரசாரத்துக்கு யார் போவது? எம்.ஜி.ஆரின் இடத்தை நிரப்பப்போவது யார்? மக்களைத் திரட்டுவது எப்படி? நாம் புறப்படுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தார் ஜெயலலிதா. அதேநேரம்,  அதிமுக தலைவர்கள்  ‘ஜெயலலிதா பிரசாரம் செய்யப்போவதில்லை.’என்று பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருந்தனர்.   அந்த செய்தியையும்  படித்தார்.
இப்படி செய்தி கொடுத்தது யார் என்று ஓரளவு யூகிக்க முடிந்தது ஜெயாவால்...இதை ஆர்.எம்.வீ.,தான் கொடுத்திருக்க வேண்டுமென தீர்மானித்தார். அவர் அப்படி நினைக்கவும் காரணம் இருந்தது.



உண்மையில் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்தபோது பெயருக்குத்தான்  நிழல் முதல்வராக நெடுஞ்செழியன் இருந்தார் மற்றபடி, சகலமும் ஆர்.எம். வீரப்பன் வசமே இருந்தன. சகலமும் என்றால் கட்சி நிர்வாகம் தொடங்கி ஆட்சி, தேர்தல், கூட்டணி, வேட்பாளர்கள், நிதி, பிரசாரம் அனைத்துமே அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தன. பிரச்சாரத்துக்கு யாரை, எங்கே அனுப்பலாம் என்பதை ஆர்.எம்.வீதான் முடிவு செய்தார். மொத்தத்தில் முதல்வரே ஆர்.எம்.வீ.,தான்.

அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவுக்கும் ஆர்.எம்.வீக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. சினிமா காலத்தில் இருந்தே அவர்கள் இருவருக்குமே ஒத்துவராது. அரசியலிலும் அது நீடித்துக் கொண்டிருந்தது.ஏற்கனவே ஒரு முறை பிரசாரத்திற்கு ஆர்.எம்.வீ., போகாததால் கட்சியின் கொ.ப.செ., என்ற முறையில் அவருக்கே நோட்டீஸ் அனுப்பியிருந்தார் ஜெ. அதன்பிறகு ஆர்.எம்.வீ-க்கு ஜெயா மேலிருந்த கடுப்பு இன்னும் அதிகரித்தது

எம்.ஜி.ஆரிடம் தனக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி கட்சிக்குள் ஜெயா  அதிகாரம் செலுத்துவதில் ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலருக்கும் விருப்பம் இல்லை. பலத்த அதிருப்தியில் இருந்தனர்.

தங்களுடைய அதிருப்தியை எம்.ஜி.ஆரிடம் நேரடியாகச் சொல்லமுடியவில்லை. தவித்தனர். தகுந்த சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தனர். தற்போது கிடைத்துவிட்டது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஜெயலலிதாவைத் தேர்தல் பிரசாரத்துக்கு அனுப்பக்கூடாது.   ஜெயலலிதாவிற்கு. அதற்கு வாய்ப்பே கொடுக்கக்கூடாது. ஓரங்கட்டியே தீரவேண்டும் என்று முடிவு செய்து விட்டனர். அதன் எதிரொலியே ஜெயலலிதா பிரசாரம் செய்யமாட்டார் என்கிற அந்தப் பத்திரிகை செய்தியாக வெளிப்பட்டது.

தன்னை வலுக்கட்டாயமாக அமுக்கப்பார்க்கிறார்கள்  என்றதும் திமிறிக்கொண்டு எழுந்துவிட்டார் ஜெ. 3 டிசம்பர் 1984 அன்று ஆண்டிப்பட்டியில் தொடங்கியது ஜெயலலிதாவின் பிரசாரம். அடுத்தடுத்து நெல்லை, மதுரை, ராமநாதபுரம், கோவை, ஈரோடு, சேலம் என்று மொத்தம் இருபத்தியோரு நாள்களுக்குப் பிரசாரம் செய்தார். மக்களிடம் நேரடியாக உரையாடினார். எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசினார். எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்த திமுகவின் தவறான பிரசாரம் பற்றிப் பேசினார். வாக்காளர்களிடம் கேள்விகேட்டுப் பதில் பெறும் வித்தியாசமான பிரசாரத்தை மேற்கொண்டார். உண்மையிலேயே சூறாவளிச் சுற்றுப்பயணம் அது.

எம்.ஜி.ஆர் பிரசாரம் செய்யாத குறையை ஒற்றை ஆளாக நின்று ஜெயலலிதா ஈடுகட்டியதாகப் பத்திரிகைகள் எழுதித் தீர்த்தன. அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு அபார வெற்றி.153 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க.,விற்கு 132 தொகுதிகள் கிடைத்தது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 62 இடங்கள் கிடைத்தது. இந்த தேர்தலில் தான் எம்.ஜி.ஆர்., அமெரிக்காவிலிருந்தே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ்- 25 தொகுதிகளிலும், அ.தி.மு.க-12 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தது.


இந்த வெற்றிக்கு சில காரணங்கள் இருந்தது. எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் சிகிட்சையில் இருக்கும்போது அவர் நடப்பாதையும், கைகாட்டுவதையும், சாப்பிடுவதையும் வீடியோ காட்சிகளாக்கி, அதை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் மூலம் கச்சிதமாக எடிட் செய்யப்பட்டு பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினர் அதிமுக., தலைவர்கள். கூடவே சமீபத்தில் படுகொலையான இந்திரா காந்தியின் இறுதி ஊர்வல காட்சிகளும் அந்த வீடியோவில் இணைக்கப்பட்டது.  ராஜீவ்காந்தியையும் எம்.ஜி.ஆரையும் குறிக்கும் விதமாக தாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு, வாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு, சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு என்ற பிரச்சார கோசங்கள் முதன்மை பெற்றன.

தன்னைச் சுற்றிப் பலமான எதிர்ப்புவலை பின்னப்படுகிறது என்று தெரிந்ததும் ஆவேசப்பட்டு எழுந்து, பிரசாரம் செய்து, அந்த வலையை அறுத்தெறிந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவாலும், அதிமுக தொண்டர்களாலும் மறக்கமுடியாத பிரசாரம் அது. கொண்டாடி தீர்த்தனர் ஜெ ஆதரவாளர்கள். ஆம் அ.தி.மு.க., வில் அப்போது ஜெயலலிதாவிற்கென்று  அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் என்று ஒரு கோஷ்டி உருவாகியிருந்தது.

சிகிட்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்.ஜி.ஆர். முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இரண்டு  வருடங்கள் கழித்து மீண்டும் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு சிகிட்சைக்காக அமெரிக்கா சென்றார்.அந்த நேரத்தில், எம்.ஜி.ஆர், தனது செல்வாக்கு வளருவது கண்டு பொறாமைப்படுகிறார் என்றும், இனி அவர் முதல்வராக இயங்க முடியாதென்றும், அதனால் என்னை முதல்வராக்க்குங்கள் என்றும் பிரதமர் ராஜீவிற்கு தன் கைப்படவே ஒரு கடிதம் எழுதி அதை சேலம் கண்ணன் மூலம் ஜெயலலிதா கொடுத்து விட்டதாக மக்கள் குரல் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டது. இது போதாதா ஜெயின் அரசியல் எதிரிகளுக்கு....எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் அந்த விஷயத்தை பக்குவமாக அவரின் காதிற்கு கொண்டுசென்றனர் அவரின் அரசியல் எதிரிகள்.

இதைக்கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே போய் விட்டார் எம்.ஜி.ஆர். உடனே, இனி ஜெயலலிதாவிடம் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று வாய்மொழி உத்தரவிட்டார். தொடர்ந்து அவரை கட்சியிலிருந்தும் நீக்குவது என்பது அவரின் திட்டம்.



அதன்பிறகு ஒரு நாள் ஜெயாவை கட்சிலிருந்து நீக்க முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்,. அப்போது அங்கிருந்த அமைச்சர் ராஜாராம் இப்போது நீக்கினால் கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டுவிடும். உங்களுக்கு பூர்ண குணமானபின் இந்த முடிவை எடுக்கலாம் என்று அவரின் முடிவுக்கு முட்டுக்கட்டை போட்டார். அப்போதைய அமைச்சர் திருநாவுக்கரசரும் ஜெயலலிதாவை நீக்கக்கூடாது என்று பலமாக வாதாடினார். அவரின் ஆலோசனை படியே ஜெ.,யை நீக்கும் முடிவு தற்காலிகமாய் தள்ளிவைக்கப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே எம்.ஜி.ஆர். மரணமடைந்து விட்டார்.
 

அந்த சமயத்தில் இறுதிவரை எம்.ஜி.ஆரின் உடலருகே இருந்த ஜெ எல்லோராலும் கவனிக்கப்பட்டார். . எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வேனில் ஏறியபோது கே.பி.ராமலிங்கத்தால் வ்லுக்கட்டாயமாக இழுத்து கீழே தள்ளப்பட்ட  சம்பவமும் அப்போது  நடந்தது.அதனால் அனுதாபமும் பெற்றார்.


எம்.ஜி.ஆரின் மறைவையடுத்து அரசு நிர்வாகத்தை கவனிக்க நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றார். நிரந்தர முதல்வராக தானே போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்


தானே முதல்வர் பதவிக்கு போட்டியிடப்போவதாக நெடுஞ்செழியன் அறிவித்தாலும், அதை ஆர்.எம்.வீரப்பன் ஏற்றுக்கொள்ளவில்லை. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளை முதலமைச்சராக்காப்போவதாக அவர் அறிவித்தார். இதனால், அதிருப்தி அடைந்த நெடுஞ்செழியன் ஜெயலலிதாவுடன் இணைந்தார்.


நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, பண்ரூட்டி ராமச்சந்திரன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்( சாத்தூரார்), அரங்கநாயகம் போன்ற ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி அண்ணா.தி.மு.க.,வின் பொதுச்செயலாளராக ஜெயாவை தேர்ந்தெடுத்தனர். இதை ஜானகி, ஆர்.எம்.வீ., போன்றோர் கடுமையாக எதிர்த்தனர். அந்த நேரத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களில் 98 பேர்கள் ஜானகிக்கு ஆதரவாகவும், 29 பேர்கள் ஜெயாவிற்க்கு ஆதரவாகவும் இருந்தனர். ஜானகி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறிவிடக்கூடாதென்று ஒரு ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.


ஜெ ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 29 பேரும் வட மாநிலத்திற்கு அழைத்துசெல்லப்பட்டு ஆம்னிவேனில் ஊர் சுற்றிக்காட்டப்பட்ட  கூத்தும் நடந்தது. ஜெ ஆதரவாளர்கள் திருநாவுக்கரசுவும், சாத்தூர் ராமச்சந்திரனும் அந்த வேலையை பார்த்துக்கொண்டனர்.

பின் ஜானகி ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை கவர்னர் குரான முன் நிறுத்தி ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார் ஆர்.எம்.வீ.,.அதன் படியே ஜானகியை ஆட்சியமைக்க அழைத்தார் கவர்னர் குரானா.3 வாரத்திற்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறும் கட்டளையிட்டார்.



 1988 ஜனவரியில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் ஜானகி. இரு அணிகளில் ஜானகிக்கு ஆதரவு அதிகமிருந்தாலும் ஜெயலலிதா வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் மைனாரிட்டி ஜானகி அரசாகவே அது இருந்தது. 3 வாரத்திற்குள் வேறு மெஜாரிட்டியை  நிரூபித்தாக வேண்டுமே.....


62 இடங்கள் வைத்துள்ள காங்கிரஸ் ஆதரித்தால் போதும்...ஆட்சி பிழைத்துக்கொள்ளும் என்று முடிவு செய்த ஆர்.எம்.வீ., நடிகர் சிவாஜி கணேசன் மூலம் ராஜீவ் காந்திக்கு தூது விட்டார். ஆனால், பிளவு பட்ட அதிமுக., வை ஆதரிக்கப்போவதில்லை என்று கூறி விட்டார் ராஜீவ் இதற்கிடையில் ஜெயலலிதாவும் டெல்லி சென்று ராஜீவிடம் ஆதரவை கோரினார். ஜெயலலிதாவிடமும் அதே பதிலை சொன்னவர். சட்டசபையில் ஜானகியை எதிர்த்து காங்கிரஸ் வாக்களிக்கும் என்றும் அறிவித்தார்.

வேறுவழியின்றி தி.மு.க.,வின் 20 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெறும் முயற்சியில் ஆர்.எம்.வீ, ராசாராம், மாதவன் போன்றோர் இறங்கினர். அ.தி.மு.க.,வின் எந்த பிரிவையும் ஆதரிக்கப்போவதில்லை என்று தி.மு.க., செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுவிட்டதால் ஆதரவு தரமுடியாது என்று கை விரித்து விட்டார் கலைஞர்( அப்படி சொன்னது எத்தனை பெரிய தவறென்று இப்போது உணர்ந்திருப்பார் கலைஞர். அவர் மட்டும் அன்று ஜானகிக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் 98+20=118 என்ற எம்.எல்.ஏ.,க்கள் அடிப்படையில் ஜானகி அரசு காப்பாற்றப்பட்டிருக்கும். தாக்குப்பிடிக்க முடியாமல், ஜெயாவும் அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பார்).


ஜனவரி 28 அன்று சட்டமன்றம் கூடியதும் ஜானகி-ஜெயா அணிகளுக்கிடையே பெரும் கலவரம் வெடித்தது. மைக், ஒலிபெருக்கிகள் உடைக்கப்பட்டன. பல எம்.எல்.ஏ.,க்களின் மண்டை உடைந்து ரத்தம் ஓடியது. கட்சி மாறி வாக்களித்ததால்...கட்சி கட்டுப்பாட்டை மீறிய   33 எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன். ஜானகி கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறிவிட்டதாகவும் அறிவித்தார்.

ஆனால், சட்டஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக கூறி ஜானகி ஆட்சி வெறும் 24 நாட்களில் கலைக்கப்பட்டது பரிதாபமான க்ளைமேக்ஸ்.

அதன் பின் ஒரு வருடம் ஜனாதிபதி ஆட்சி தமிழகத்தில் அமலில் இருந்தது.

இதற்கிடையில் ஜெயலலிதா அணியில் குழப்பம் ஏற்பட்டது. ஜெயா அணியில் செயல்பட்ட நாவலர், திருநாவுக்கரசு, பண்ரூட்டி, அரங்கநாயகம் போன்ற தலைவர்கள்(?) ஜெ.,க்கு எதிராக திரும்பினர். கட்சிக்கு வசூல் செய்யப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஜெயாவிடம் கணக்கு கேட்ட இவர்கள் கட்சியிலிருந்து இல்லை...இல்லை...ஜெ அணியிலிருந்து நீக்கப்பட்டனர். தங்களை நீக்க ஜெ.,க்கு அதிகாரமில்லை என்று கூறிய இவர்கள், நால்வர் அணி என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தனர்.


அப்போதுதான் தம்பி வா, தலைமை ஏற்க வா என்று அறிஞர் அண்ணாவால் அழைக்கப்பட்ட நடமாடும் பல்கலைக்கழகமான நாவலரை உதிர்ந்த மயிர் என்ற உலகப்புகழ் பெற்ற வார்த்தையால் வசை படினார் ஜெ.,

நால்வர் அணி சிறிது காலத்துக்குள்ளாகவே மீண்டும் ஜெயாவுடன் இணைந்தது.

1989 ஜனவரியில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., இரண்டு பிரிவுகளானதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு... ஜானகி அணிக்கு இரட்டைப்புறா சின்னமும், ஜெயலலிதாவிற்க்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டது. ஜானகியுடன் சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணியும், ஜெயலலிதாவுடன் கம்யூனிஸ்ட்டும் கூட்டணி அமைத்தனர். தி.மு.க., பலமான கூட்டணி அமைத்தது. காங்கிரஸ் ஜெயித்தால் மூப்பனார் முதல்வர் என்ற கோஷத்துடன் தனித்து போட்டியிட்டது.

இந்த தேர்தல் முடிவில்...தி.மு.க., மீண்டும் அதாவது 13 வருட இடைவெளிக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. அதே நேரம் 198 இட்ங்களில் போட்டியிட்ட ஜெ., அணிக்கு 27 இடங்களும், 175 இடங்களில் போட்டியிட்ட ஜானகி அணிக்கு 1 இடமும் கிடைத்தது.  (நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் போட்டியிட்ட முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் தான் அந்த ஒருவர்).

ஆண்டிப்பட்டியில் போட்டியிட்ட ஜானகியம்மாள் 22,647 வாக்குகள் பெற்று  தி.மு.க., வேட்பாளர் ஆசையனிடம் தோல்வியை தழுவி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார். அதே நேரம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 33,191 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அங்கு ஜெயாவை எதிர்த்து போட்டியிட்ட ஜானகி அணி வேட்பாளர்  நடிகை வென்னிற ஆடை நிர்மலா வெறும் 1512 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்திருந்தார்.


இதில் ஜானகி அணிக்கு மொத்தம் 21,78,071 (9%) வாக்குகளும், ஜெயலலிதா அணிக்கு மொத்தம்  50,54,138 (21%) வாக்குகளும் கிடைத்திருந்தது.
இந்த தேர்த்ல் தோல்விக்கு பொறுப்பெற்று ஜானகி, தனது பிரிவை ஜெயலலிதா அணியுடன் இணைத்துவிட்டு அரசியலிலிருந்தே ஒதுங்கினார். அதன் பிறகே ஒருங்கிணைந்த அண்ணா.தி.மு.க., வின் பொது செயலாளராக ஜெயலலிதா ஆனார். இரட்டை இலை சின்னமும் ஜெயாவிற்கு கிடைத்தது. அரசியல் வானில் எம்.ஜி.ஆரின் வாரிசாகவும் பிரகாசித்தார்.

இந்த பதிவைப்பற்றிய சில விளக்கங்கள்:
நண்பர் செங்கோவியிடமிருந்து இப்படி ஒரு கேள்வி வந்ததும்  இதற்கான பதிலில் ஒரு முப்பது சதவீதம்  என் நினைவில் இருந்தது. அந்த  30% பதில்களே இதற்கு போதும்தான். ஆனாலும், மேலோட்டமாக சொல்வதைவிட இன்னும் கொஞ்சம் ஆழமாக சொன்னால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதன்பிறகே ஒரு தீவிர தேடலில் இறங்கினேன்.இனையத்தில்  ஜெயா பற்றிய தகவல்களும்,சம்பவங்களும் கொட்டிக்கிடந்தது. சம்பவங்களின் சுவாரஸ்யமான தொகுப்புதானே வரலாறு. அந்த பொக்கிஷங்களை எடுத்து என் நினைவில் இருந்த விஷயங்களையும் ஆங்காங்கே சேர்த்து என் பாணியில் நேர்த்தியாக தொகுத்தளித்தேன். அவ்வளவே என் பணி.ஆம்... நான் இந்த கட்டுரையின் தொகுப்பாளர் மட்டுமே. இந்த தேடலின் மூலம் எனக்கு தெரியாத விஷயங்கள் நிறையவே தெரிந்து கொண்டேன். இப்படி ஒரு கேள்வியை கொடுத்த நண்பர் செங்கோவிக்கு நன்றி.....


இன்னொரு முக்கியமான விஷயம்....இதில் சசிகலா பற்றி ஒன்றுமே இல்லையே என்று கேட்பவர்களுக்கு....ஜெயலலிதா அண்ணா தி.மு.க.,வின் பொதுச்செயலாளர் ஆன வரலாறுதான் நமக்கு முக்கியமே தவிர...ஜெயின் வரலாறு அல்ல....என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். 

=========================================================


இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


More than a Blog Aggregator